சென்னை மாவட்டம் சூளைமேட்டில் வீரபாண்டி நகர் முதல் தெருவில் மழைநீர் வடிகால் வாய்க்கால் திறந்த நிலையில் கிடந்தது. இன்று நடை பயிற்சி செய்து கொண்டிருந்த 45 வயது பெண் ஒருவர் அந்த வடிகால் வாய்க்காலில் விழுந்து காயமடைந்து உயிரிழந்ததாக செய்திகள் உலா வந்தது இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அந்த பெண்ணின் உடலை மீட்டனர். ஆனால் அவர் தவறி விழுந்து உயிரிழக்கவில்லை.
அவரது வாய் கட்டப்பட்ட நிலையில் இருந்தது. இதுகுறித்து சென்னை மாநகராட்சி தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதில் மீட்கப்பட்ட பெண்ணின் வாய் கட்டப்பட்ட நிலையில் இருந்தது. அவர் வடிகால் வாய்க்காலில் தவறி விழுந்து உயிரிழக்க வாய்ப்பு இல்லை. இது குறித்து போலீசார் தரப்பில் விசாரணை நடைபெற்ற வருகிறது. இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் அந்த பெண்ணை யாராவது கொலை செய்து உடலை வடிகால் வாய்க்காலில் வீசி சென்றார்களா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் உச்சகட்டப் பரபரப்பை எட்டியுள்ள நிலையில், இன்னும் நான்கு நாட்களே மீதமிருப்பதால் அரசியல் கட்சிகள் அனல்…
பீகார் மாநிலம் சமஸ்திப்பூரில், வரதட்சணை கொடுமையால் கொல்லப்பட்டதாகக் கருதப்படும் இளம்பெண் ஒருவரின் உடலை, அடக்கம் செய்யப்பட்ட ஒரு மாதத்திற்குப் பிறகு…
திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்த நெய்க்காரப்பட்டியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி அஜ்மத் உசேன் (41). இவருக்கும் தஸ்லீமா பேகம் (35) என்பவருக்கும்…
சமஸ்திபூர் மாவட்டம் சக் சாஹோ பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில், வகுப்பறையின் பின் வரிசை மேஜை மீது படுத்துக்கொண்டு ஆசிரியை…
அட்சய திருதியை என்றாலே தங்கம் வாங்க வேண்டும் என்ற எண்ணம் பலரிடமும் மேலோங்கி இருக்கிறது. ஆனால், "அட்சயம்" என்பதற்கு குறையாதது…
யவத்மால் மாவட்டத்தின் ஆர்னி தாலுகாவில் உள்ள போர்கான் கிராமத்தில் வசித்து வந்த மனோஜ் என்பவர், தனது நண்பரை இரவு உணவிற்காக…