அமெரிக்காவின் அரிசோனா மாநிலத்தைச் சேர்ந்த 42 வயதான மருத்துவமனை ஊழியர் ஜோஷுவா ஜேம்ஸ் லோசானோ என்ற பெண், சிறுவர்களைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தி ஆபாச வீடியோக்களை இணையம் மூலம் அனுப்பி வந்த அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
காணாமல் போன மற்றும் பாலியல் ரீதியாகப் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான தேசிய மையம் அளித்த தகவலின் பேரில், இணையக் கணக்கு மற்றும் ஐபி முகவரியை வைத்து அதிகாரிகள் அந்தப் பெண்ணைக் கைது செய்தனர். திங்கள்கிழமை நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையின் போது, அரசு வழக்கறிஞர் ஆஷ்லி ஸ்டெட்ஸன் அந்தப் பெண் மீது 10 கடுமையான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாகவும், ஒவ்வொரு குற்றத்திற்கும் 10 ஆண்டுகள் வீதம் மொத்தம் 100 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை அனுபவிக்க நேரிடும் என்றும் கூறினார்.
நூறு ஆண்டுகள் சிறைத் தண்டனை என்ற வார்த்தையைக் கேட்ட அடுத்த கணமே அந்தப் பெண் நீதிமன்றத்திலேயே திடீரென மயங்கி விழுந்தார். உடனடியாக மருத்துவக் குழுவினர் அவருக்குச் சிகிச்சை அளித்தனர். பின்னர், 1.5 லட்சம் டாலர் ஜாமீன் தொகையை நிர்ணயித்த நீதிபதி, அவர் ஜாமீனில் வெளிவந்தாலும் சிறுவர்களைத் தொடர்புகொள்ளக் கூடாது, ஸ்மார்ட்போன் மற்றும் இணையத்தைப் பயன்படுத்தக் கூடாது, காலில் எலக்ட்ரானிக் கண்காணிப்புக் கருவியை அணிய வேண்டும் எனப் பல கடுமையான நிபந்தனைகளை விதித்து விசாரணையைச் செப்டம்பர் 21-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள சாமக்கால் கடற்கரையில், சமூக வலைதளங்களில் 'ரீல்ஸ்' வீடியோ பதிவேற்றுவதற்காக எடுக்கப்பட்ட சாகச முயற்சி…
பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த தெருவில், இளம் பெண் ஒருவரை திடீரென தேனீக்கள் கூட்டம் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…
கொட்டாரக்கரை தமராசேரி முக்கு அருகே வியாழக்கிழமை மாலை எதிரே வந்த கன்டெய்னர் லாரியும் ஆம்னி வேனும் நேருக்கு நேர் மோதி…
சுல்தான்பூர் மாவட்டம் அம்ஹத் சௌக் பகுதியில், தொழிலதிபர் ஷஷாங்க் கெளஷலை பேருந்து நிலையத்தில் இறக்கிவிடுவதாகக் கூறி காரில் ஏற்றியுள்ளனர். அம்ஹத்…
ஜம்முவின் ஜானிபூர் பகுதியில் உள்ள லோயர் ரூப் நகர் சாலையில் நீரஜ் என்ற வாலிபர், தனது தம்பி ரிஷு மற்றும்…
தன் மனைவி வைஷ்ணவியைக் கொலை செய்த வழக்கில் பிணையில் வெளியே வந்த ஹரிபாபு என்ற நபர், நிஜாமாபாத் ஆர்.ஆர் எக்ஸ்…