புனேவை சேர்ந்த பெண் ஒருவர் தன்னுடைய கண்களை சிறுநீரால் கழுவும் வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தன்னுடைய இன்ஸ்டாகிராமில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளா. அதில் அந்த பெண் தினமும் காலையில் எழுந்ததும் தன்னுடைய சிறுநீரில் கண்களை கழுவுவதாக கூறியுள்ளார். அதோடு Urine Eye Wash — Nature’s Own Medicine என்ற தலைப்பில் இந்த வீடியோவை வெளியிட்டு இருக்கிறார். அதில், “காலை நேரத்தில் என்னுடைய சிறுநீரால் கண்களை கழுவுவதால் கண்களில் ஏற்படும் வறட்சி, எரிச்சல், சிவத்தல் போன்ற பிரச்சனைகள் இருந்து நிவாரணம் கிடைக்கிறது என்றும் இயற்கை மற்றும் மாற்று சிகிச்சை முறை மீதான நம்பிக்கை இல்லை என்றும் கூறியுள்ளார்.
இந்த வீடியோ வெளியான நிலையில் மருத்துவர்கள் பலரும் எச்சரிக்கை விடுத்துள்ளார்கள். அதாவது கண் பராமரிப்புக்கு சிறுநீர் பாதுகாப்பானது அல்ல. இது போன்ற செயல் கண் எரிச்சல், தொற்று, பார்வை இழப்பு போன்ற நோய்களை ஏற்படுத்தும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்கள். சிறுநீரக மருத்துவரான டாக்டர் ஜெய்சன் பிலிப், இது மாதிரியான செயல்களை ஒருபோதும் செய்யாதீர்கள். உங்களை நீங்களே காயப்படுத்தி கொள்ளாதீர்கள். ரசாயன கழிவுகளை வெளியிடுவது உயிரியல் செயல்முறை. அதை மீண்டும் பயன்படுத்தினால் தீங்கு ஏற்படும் என்று மக்கள் ஏன் புரிந்து கொள்ளவில்லை? என்று கூறியுள்ளார். பெண்ணின் இந்த வீடியோவுக்கு எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில் அந்த வீடியோ தற்போது அகற்றப்பட்டுள்ளது.
இரயில்வே டி.ஆர்.எம் அலுவலகத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்த 29 வயதான அஜய் குஷ்வாஹா, தேநீர் குடிப்பதற்காக வெளியே சென்றிருந்தபோது எதிர்பாராத…
புனேயின் சோம்வார் பேத் பகுதியில், 10 வயது சிறுவன் ஒருவன் அடுக்குமாடி குடியிருப்பின் மின்தூக்கியில் வைத்து மிகக் கொடூரமாகத் தாக்கப்படும்…
2026-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நடிகர் அர்ஜுன் தாஸின் கார் தேர்தல் பறக்கும் படையினரால் சோதனை செய்யப்பட்டு,…
பெங்களூருவைச் சேர்ந்த திலீப் என்ற 28 வயது ஜிம் பயிற்சியாளர், திருமணமான பெண்ணின் மிரட்டல் காரணமாக தற்கொலை செய்து கொண்ட…
ஏற்கனவே விதியால் உடைந்து போயிருந்த ஒரு மாற்றுத்திறனாளி முதியவரிடம், ஒரு சிறுமி வந்து பேசுகிறாள். "பாபா, உங்களுக்கு ஏதாவது வேண்டும்…
மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் பகுதியில் நடந்த இந்தச் சம்பவம், மின் பாதுகாப்பு குறித்த அலட்சியம் எவ்வளவு பெரிய உயிர் இழப்பை…