“சாலையா இல்ல மரணக்குழியா…?” ஸ்கூட்டரில் சென்று விழுந்த பெண்… அடுத்த நொடியே துடிதுடித்து இறந்த சோகம்…. இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!

By Devi Ramu on ஆவணி 3, 2026

Spread the love

மகாராஷ்டிர மாநிலம் தாணே-பிவாண்டி சாலையில் 46 வயதுடைய பெண் ஒருவர் தனது இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தார். அப்போது, மழைக்காலத்தால் சாலையில் ஏற்பட்டு, தண்ணீரால நிரம்பியிருந்த பெரும் குழியை எதிர்பாராதவிதமாக அந்தச் வாகனம் கடக்க முயன்றபோது நிலைதடுமாறியது. இதில் அந்தப் பெண் ஸ்கூட்டரிலிருந்து தூக்கி வீசப்பட்டுச் நடுரோட்டில் விழுந்தார்.

அப்போது அந்த வழியே பின்னால் அதிவேகமாக வந்த கனரக லாரி ஒன்று, சாலையில் விழுந்து கிடந்த அந்தப் பெண்ணின் மீது ஏறி இறங்கியதாகக் கூறப்படுகிறது. இந்தச் கொடூர விபத்தில் அந்தப் பெண் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மழைக்காலத்தில் சாலைகளைச் சரியாகப் பராமரிக்காத நிர்வாகத்தின் அலட்சியமே இந்த விபத்திற்குக் காரணம் எனக் கூறி அப்பகுதி மக்கள் பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் வெளியிட்டுள்ளனர்.