பட்டப்பகலில் போதையில் ரகளை செய்த பெண்… செருப்பால் ஆண்களை அடித்து ஆபாச வார்த்தை… ஷாக்கிங் வீடியோ…!

By Nanthini on ஆடி 30, 2025

Spread the love

உத்தரப்பிரதேசம் மாநிலம் லக்னோவில் மது போதையில் பெட்ரோல் பங்கில் பெண் ஒருவர் தகராறு செய்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. பெட்ரோல் பங்கில் வரிசையில் முதலில் நின்றதால் தனக்கு முதலில் பெட்ரோல் நிரப்ப வேண்டும் என அந்தப் பெண் வாக்குவாதம் செய்துள்ளார். வாக்குவாதம் முற்றியதில் அந்த பெண் ஆபாசமாக பேசி ஆண்களை கடுமையாக தாக்கியுள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகிய வருகின்றது.

மேலும் அந்தப் பெண் ஒருவரின் பைக்கை தள்ளிவிட்டு மற்றவர்களிடம் கத்தியதும் வீடியோவில் பதிவாகியுள்ளது. தன்னை எதிர்த்தவர்களிடம் தகாத வார்த்தைகளால் பேசிய அவர் ஒரு கட்டத்தில் செருப்பை எடுத்து அவர்களை அடிக்கவும் செய்தார். அந்தப் பெண் பேசிய ஆபாசமான வார்த்தைகள் இணையத்தில் பலரையும் கோபமடைய செய்துள்ளது. மேலும் சம்பவத்தை வீடியோ எடுத்த ஒருவரை அந்தப் பெண் தாக்க முயன்றுள்ளார். அவரிடமிருந்து போனை பறிக்க முயற்சி செய்து ஆபாசமாக திட்டி உள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.