புருஷனுக்கு பக்கவாதம், 22 வயதில் மகள்.. கள்ளக்காதலனுடன் இருவரையும் தீர்த்துக்கட்டி நாடகமாடிய பெண்… அமானுஷ்ய சடங்குகளால் வெளிவந்த உண்மை…!

By Nanthini on புரட்டாதி 4, 2025

Spread the love

தெலுங்கானா மாநிலம் பூபால பள்ளி மாவட்டம் ஒடிதலா கிராமத்தை சேர்ந்த குமாரசாமி (58) தன் முதல் மனைவி இறந்த பிறகு கவிதா என்ற பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு வர்ஷினி மற்றும் ஹன்சிகா என்ற இரண்டு மகள்கள் உள்ளன. இளைய மகள் ஹன்சிகாவுக்கு திருமணம் ஆகி வெளியூரில் கணவருடன் வசித்து வருகிறார். கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு குமாரசாமிக்கு பக்கவாத நோய் ஏற்பட்டதால் வீட்டில் முடங்கினார். இந்நிலையில் அதே கிராமத்தை சேர்ந்த திருமணம் ஆகாத ராஜ்குமார் என்பவருடன் கவிதாவுக்கு கள்ளத்தொடர்பு ஏற்பட்டதால் இருவரும் அடிக்கடி தனிமையில் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர்.

மனைவியின் கள்ளக்காதல் விவகாரம் குமாரசாமிக்கு தெரிய வந்ததால் அவரை கண்டித்துள்ளார். இதனால் கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. கள்ள காதலுக்கு இடையூறாக இருந்த கணவரை தீர்த்து கட்ட கவிதா முடிவு செய்த நிலையில் வீட்டில் மகள் இல்லாத போது ராஜ்குமாரை வீட்டுக்கு வரவழைத்து கணவரின் கால்களை பிடித்து கொண்டார் கவிதா. பிறகு ராஜ்குமார் குமாரசாமியின் கழுத்தை நெறித்து கொலை செய்துள்ளார். பின்னர் கணவர் உடல் நலக்குறைவால் இறந்து விட்டதாக நாடகமாடியுள்ளார். ஐந்து ஆண்டுகளாக உடல் நலக்குறைவாக இருந்த தந்தை எப்படி திடீரென இறந்து விட்டார், ராஜ்குமார் ஏன் அடிக்கடி நமது வீட்டுக்கு வந்து செல்கிறார் என வர்ஷினி தாயிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

   

கணவர் குறித்து கேள்வி எழுப்பியதால் மகளையும் கொலை செய்ய கவிதா முடிவு செய்த நிலையில் கடந்த மாதம் இரண்டாம் தேதி வர்ஷினி நள்ளிரவு ஆழ்ந்த உறக்கத்திலிருந்து உள்ளார். அப்போது கவிதா தன்னுடைய கள்ளக்காதலனை வீட்டுக்கு வரவழைத்து கழுத்தை நெறித்து கொலை செய்துள்ளார். பிறகு மகளின் பிணத்தை சாக்கு மூட்டையில் கட்டி கிராமத்தின் புறநகர் பகுதியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு பின்புறம் இருந்த முள்புதரில் வீசியுள்ளார். மகள் காணாமல் போனதாக போலீசில் புகார் அளித்து நாடகமாடியுள்ளார்.

   

பிறகு கள்ளக்காதல் என் ராஜ்குமார் கடந்த மாதம் 25ஆம் தேதி முள் புதரில் இருந்த வர்ஷினியின் பிணத்தை மீண்டும் மூட்டை கட்டினார். பின்னர் பிணத்தை தன்னுடைய பைக்கில் வைத்து எடுத்துச் சென்று சாலையோரம் வர்ஷணியின் பிணத்தை வைத்து பிணத்தின் மீது மஞ்சள் குங்குமம் உடலை சுற்றிலும் பூக்களை தூவினார். ஆணிகளை அடித்து அமானுஷ்ய சடங்கு செய்து வர்ஷினியை யாரோ கொலை செய்ததாக சித்தரிக்க முயற்சி செய்தார். வர்ஷினியின் பிணத்தினருகே ஆதார் அட்டையை வீசி விட்டு வந்தார்.

 

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கவிதாவுக்கு போன் செய்த நிலையில் தனது மகளை யாரோ கொலை செய்து விட்டதாக கதறி எழுது நாடகம் ஆடினார். உடனே கவிதாவின் நடத்தையில் போலீசாருக்கு சந்தேகம் வந்ததால் விசாரணை நடத்தியதில் தனது கள்ளக்காதலன் உதவியுடன் மகளை கொன்றதை அவர் ஒப்புக்கொண்டார். இதனைத் தொடர்ந்து போலீசார் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.