மத்திய பிரதேச மாநிலத்தில் உலகிலேயே இரண்டாவது மிகப்பெரிய பன்னா வைர சுரங்கம் அமைந்துள்ளது. இங்குள்ள 8 மீட்டர் சுரங்க நிலம் ஆண்டுக்கு 200 ரூபாய்க்கு ஏலம் விடப்படும். அதில் மக்கள் தோண்டி எடுக்கும் வைரத்தை பன்னா வைர அலுவலகத்தில் டெபாசிட் செய்வார்கள். 3 மாதங்களுக்கு ஒரு முறை வைர ஏலம் நடைபெறும் போது கண்டெடுக்கப்பட்ட வைரம் ஏலத்தில் விடப்பட்டு 11 % ராயல்டி, 1 % டிடிஎஸ் என மொத்தம் 12 சதவீதம் கழிக்கப்பட்டு மீதமுள்ள தொகை அந்த வைரத்தை கண்டெடுத்தவருக்கு கொடுக்கப்படும்.
சமீபத்தில் ரச்னா கோல்டர் என்ற பெண் தொழிலாளி அந்த சுரங்கத்திலிருந்து எட்டு வைரங்களை கண்டுபிடித்துள்ளார். அதில் மிகப்பெரிய வைரம் 0.79 காரட் எடை உடையது. இதுகுறித்து வைர நம்புனர் அனுபம் சிங் கூறும்போது, ரச்னா கண்டுபிடித்த 8 வைரங்களில் 6 வைரங்கள் அதிக தரம் கொண்டது. இரண்டு கற்கள் நிறமற்றது. அந்த வைரங்களை மாவட்ட வைர அலுவலகத்தில் ரச்னா டெபாசிட் செய்துள்ளார். இது பல லட்ச ரூபாய்க்கு ஏலம் விட வாய்ப்புள்ளது எனக் கூறியுள்ளார். ரச்னாவுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். ஏல விற்பனை மூலம் கிடைக்கும் தொகை அவரது குடும்பத்தினருக்கு பெரிய உதவியாக இருக்கும்.
பெங்களூரு மாரத்தஹள்ளி பகுதியில் உள்ள 'முத்தைய்யா' உணவகத்தில் இன்று அதிகாலை எதிர்பாராத விதமாக பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. சமையலறையில்…
தமிழக அரசியலில் கடந்த 60 ஆண்டுகாலமாக நீடித்து வந்த 'திமுக - அதிமுக' எனும் இருமுனைப் போட்டி இன்றுடன் ஒரு…
சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் இன்று நடைபெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க விழாவில், தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் தமிழகத்தின்…
தமிழக சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களைப் பெற்றுத் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த போதிலும், ஆட்சி அமைக்கத் தேவையான 118 என்ற…
தமிழக சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்று தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியைப் பிடித்துள்ள நிலையில், அக்கட்சியின் சோழவந்தன் தொகுதி எம்எல்ஏவான…
தமிழகத்தின் புதிய முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள விஜய், பதவியேற்ற கையோடு மாநிலத்தின் கடன் சுமை 10 லட்சம் கோடி ரூபாயைத் தொட்டுள்ளதாகக்…