கனவாக முடிந்த வாழ்க்கை… அதிகாலையில் சூழ்ந்த கரும்புகை – பெங்களூரு உணவகத்தில் நடந்த கோர விபத்து…!

Spread the love

பெங்களூரு மாரத்தஹள்ளி பகுதியில் உள்ள ‘முத்தைய்யா’ உணவகத்தில் இன்று அதிகாலை எதிர்பாராத விதமாக பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. சமையலறையில் ஏற்பட்ட கசிவு காரணமாக தீ வேகமாக பரவியதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. அதிகாலை நேரம் என்பதால் ஊழியர்கள் உறங்கிக்கொண்டிருந்த நிலையில், உணவகத்தின் தரைத்தளம் மற்றும் முதல் தளம் முழுவதும் கரும்புகை சூழ்ந்து பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது.

இந்த கோர விபத்தில் உணவகத்தில் பணியாற்றி வந்த பவன் என்ற ஊழியர் தீக்காயங்களுடன் உயிரிழந்தார். மேலும், புகையினால் மூச்சுத்திணறல் மற்றும் பலத்த தீக்காயங்களுக்கு உள்ளான 4 ஊழியர்கள் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் நீண்ட போராட்டத்திற்குப் பிறகு தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த விபத்து குறித்து மாரத்தஹள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து, தீ விபத்திற்கான உண்மையான காரணம் என்ன? பாதுகாப்பு விதிமுறைகள் பின்பற்றப்பட்டதா? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Swetha

Recent Posts

ஆரம்பமே சர்ச்சையா..? தமிழ்த்தாய் வாழ்த்தைப் புறக்கணித்தாரா விஜய்..? அரசியல் வட்டாரத்தில் பரவும் பரபரப்பு…!

தமிழக வெற்றி கழகத்தின் உட்கட்சிப் பூசல்கள் மற்றும் நிர்வாக ரீதியான ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெற்று வரும் சூழலில், சமீபத்தில் அக்கட்சியின்…

24 minutes ago

எம்.ஜி.ஆர் முதல் விஜய் வரை: ஐந்து தலைமுறையை ஆட்டிப்படைத்த வாலியின் பேனா முனை…!

அண்ணாதுரை, கருணாநிதி என அரசியல் ஆளுமைகளுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்த வாலி, திரையுலகில் எம்.ஜி.ஆரின் ஆஸ்தான கவிஞராக உருவெடுத்தார். எம்.ஜி.ஆரின்…

52 minutes ago

BREAKING: விஜய்க்கு ஸ்டாலின் கொடுத்த ‘அட்வைஸ்’.. பதிலுக்கு விஜய் போட்ட ‘ஸ்கெட்ச்’! – தமிழக அரசியலில் பரபரப்பு….!

தமிழக அரசியலில் ஒரு மிகப்பெரிய மாற்றமாக, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் தமிழகத்தின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ளார். சென்னை…

60 minutes ago

“தளபதி போட்ட ‘ஸ்கெட்ச்’.. சாதி அரசியலுக்கு சாவுமணி?”… முதல் நாளிலேயே அதிரடி காட்டிய முதல்வர் விஜய்… ஆடிப்போன அரசியல் களம்…..!

தமிழக அரசியலில் ஒரு புதிய சகாப்தத்தை உருவாக்கும் நோக்கில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று தமிழக முதல்வராகப்…

1 மணத்தியாலம் ago

கைது செய்ய வந்தபோது வெறிச்செயல்..! தப்பியோட முயன்று போலீஸ்காரரின் கையை கடித்த நபர் – கேரளாவில் பரபரப்பு…!

கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் பாரிப்பள்ளி பகுதியைச் சேர்ந்த ஆஷிக் (24) என்பவர் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு…

1 மணத்தியாலம் ago

“இன்று விஜய் முதல்வராக பதவியேற்க காரணமே ஸ்டாலின் தானா?”…. பின்னணியில் நடந்த “மெகா” அரசியல்… வெளியான திடுக்கிடும் உண்மை…!

தமிழக அரசியலில் கடந்த 60 ஆண்டுகாலமாக நீடித்து வந்த 'திமுக - அதிமுக' எனும் இருமுனைப் போட்டி இன்றுடன் ஒரு…

1 மணத்தியாலம் ago