காலில் புண்ணிற்காக சிகிச்சைக்கு சென்ற பெண் திடீர் மரணம்… தென்காசியில் பரபரப்பு..!!

Spread the love

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தை சேர்ந்த பெண் ஒருவர் கால் புண்ணிற்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் திடீரென்று உயிரிழந்துள்ளார் .தவறான சிகிச்சையால் உயிரிழந்ததாக அவருடைய உறவினர்கள் போலீசில் புகார் தெரிவித்தனர். இதனை அடுத்து அனுமதி இன்றி நடத்தப்பட்ட தனியார் மருத்துவமனைக்கு அதிகாரிகள் சீல் வைத்துள்ளார்கள். பாவூர்சத்திரம் அடைக்கலப்பட்டணம் வேதம்புதூர் கீழ் தெருவில் வசிப்பவர் மாரிமுத்து. இவருடைய  மனைவி சுப்பம்மாள் (67). ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட இவர் காலில் புண் ஏற்பட்டு அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் இவர் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அந்த மருத்துவமனையில் டாக்டர் சரவணகுமார் என்பவர் அவருக்கு சிகிச்சை அளித்தார் .காலில் உள்ள புண்ணை சுத்தம் செய்து சிகிச்சை செய்தபோது திடீரென்று சுப்பம்மாள் இறந்துள்ளார். இதனை அறிந்து அவருடைய உறவினர்கள் தவறான சிகிச்சையால் தான் உயிரிழந்ததாக கூறி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்கள். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் சுப்பம்மாளின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள். இதனையடுத்து தனியாக மருத்துவமனை தொடங்குவதற்கும் மருந்தகம் வைப்பதற்கும் அரசிடம் முறையாக அனுமதி பெற்று தெரிய வந்ததால் அந்த மருத்துவமனைக்கு அதிகாரிகள் சீல் வைத்துள்ளார்கள்.

Soundarya

Recent Posts

“ஹார்முஸ் நீரிணை இனி எங்களுக்கு சொந்தம்”… அமெரிக்காவின் ஒரு அதிரடி முடிவால் ஆடிப்போன ஈரான்… மத்திய கிழக்கில் வெடிக்கப்போகும் அடுத்த உலகப்போர்…!

ஈரானுடனான அமைதிப் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, அந்நாட்டின் மீதான அழுத்தத்தை அதிகரிக்கும் நோக்கில் அமெரிக்கா தனது கடற்படை பலத்தை அரபிக்கடலில்…

6 minutes ago

உங்க ஆதார் நம்பரைத் திருட முடியாது!… “இனி 12 இலக்க எண் தேவையில்லை.. இந்த 1 நம்பர் போதும்”… இந்த ஒரு ரகசிய ட்ரிக்கை உடனே ஃபாலோ பண்ணுங்க…!!!

இன்றைய காலகட்டத்தில் பள்ளிச் சேர்க்கை முதல் அரசு நலத்திட்டங்கள் வரை அனைத்திற்கும் ஆதார் கார்டு மிக முக்கியமான ஆவணமாக உள்ளது.…

22 minutes ago

“எடப்பாடிக்கு ரகசியங்கள் இருக்குனா.. என்கிட்ட ஆதாரமே இருக்கு!”… சாக்கடை மேல கல்லெறிந்தால்…” – EPS-க்கு செங்கோட்டையன் கொடுத்த மரண மாஸ் பதிலடி…!

அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டு தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், தற்போது கோபிசெட்டிபாளையம் தொகுதியில் தவெக வேட்பாளராகக் களம்…

37 minutes ago

“2012-ல் செங்கோட்டையன் பதவி பறிபோனது ஏன்?”… மனைவியே கொடுத்த புகாரா?…. உண்மையை அவிழ்த்துவிட்ட எடப்பாடி ….!

2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் தற்போதே அனல் பறக்கத் தொடங்கியுள்ள நிலையில், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும் (EPS),…

52 minutes ago

FLASH NEWS: வீட்டு கேஸ் சிலிண்டர் இனி 5 நாள்களில் டெலிவரி… காலையிலேயே குட் நியூஸ்…!

தமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகம் தற்போது மீண்டும் சீராகத் தொடங்கியுள்ளது பொதுமக்களிடையே நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக முன்பதிவு செய்த…

1 மணத்தியாலம் ago

தேர்தல் நேரத்தில் தவித்த தவெக… “பத்திரிகையாளர்களை சந்திக்கபோவதில்லை” சங்கீதாவின் திடீர் மன மாற்றம்.. மகிழ்ச்சியில் விஜய்..!!

தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் நடிகருமான விஜய் மீது அவரது மனைவி சங்கீதா தொடர்ந்துள்ளதாகக் கூறப்படும் விவாகரத்து வழக்கு, வரும்…

1 மணத்தியாலம் ago