30 நாள்களுக்குள்.. தமிழ்நாடு அரசு புதிய உத்தரவு…. அலறப்போகும் அதிகாரிகள்…. CM போட்ட ஆர்டர்….!

By Nanthini on ஆவணி 1, 2026

Spread the love

பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் கோரிக்கை மனுக்களுக்கு அதிகபட்சமாக 30 நாள்களுக்குள் உரிய தீர்வு காண வேண்டும் என்றும், எந்தவொரு மனுவும் 30 நாள்களைத் தாண்டி நிலுவையில் இருக்கக் கூடாது என்றும் அனைத்துத் அரசுத் துறைகளுக்கும் தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது. மக்கள் அளிக்கும் மனுக்கள் மீது விரைவாகவும், எவ்விதத் தாமதமும் இன்றி நடவடிக்கை எடுப்பதை உறுதிசெய்யும் வகையில் பிறப்பிக்கப்பட்டுள்ள இந்த உத்தரவோடு, தங்களது துறை சார்ந்த முக்கிய நிகழ்வுகள் மற்றும் திட்டங்களின் முன்னேற்றம் குறித்து அமைச்சர்களுக்கு அதிகாரிகள் அவ்வப்போது தவறாமல் தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அரசின் இந்தத் தீர்க்கமான நடவடிக்கை நிர்வாகச் செயல்பாடுகளை மேலும் விரைவுபடுத்துவதோடு, சாமானிய மக்களின் குறைகளுக்கு உடனுக்குடன் விடிவுகாலம் பிறக்க வழிவகுக்கும் என்பதில் ஐயமில்லை.