கோவை விமான நிலையத்தில், செய்தியாளர்களிடம் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் கூறியதாவது:
“தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தில் நடைபெறும், இந்து மத பண்டிகைகளுக்கு வாழ்த்து கூறுவதில்லை. ஆனால் கேரள முதல்வர் அழைப்பை ஏற்று, உலக ஐயப்ப மாநாட்டிற்கு செல்கிறார். இது எந்த வகையில் நியாயம்? இந்து மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில், முதல்வரின் செயல்கள் உள்ளன. இந்து மதத்தை பின்பற்றுபவர் என்ற அடிப்படையில், விசிக வன்னியரசு, ராமர் குறித்து பேசியதை வன்மையாக கண்டிக்கின்றேன். சமத்துவத்தையும், நீதியையும் போற்றுவது கம்பராமாயணமும் ராமரும்தான். சட்ட ஒழுங்கு சீர்குலைவு காரணமாகவே தமிழகத்தில் சாதிய கொலைகள் நடக்கிறது. இந்தக் கொலைகளை தடுக்க ஏன் சிறப்பு சட்டம் கொண்டுவர முடியவில்லை? தமிழ் முகமூடி அணிந்து கொண்டு சி.பி.ராதாகிருஷ்ணன் வருகிறார், என்று ஸ்டாலின் கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. தமிழர்களின் பாதுகாவலர் எனக் கூறப்படுபவர்கள் ஏன் ஒரு தமிழரை குடியரசு தலைவராக ஆதரிக்கவில்லை?” என்று அவர் தெரிவித்தார்.
பெரம்பலூர் சட்டசபை தொகுதிக்குட்பட்ட செங்குணம் கிராமப் பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்தின் அடிப்படையில்…
குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் 2026 போட்டியில், மும்பை இந்தியன்ஸ் அணியின் இளம் நட்சத்திரம் திலக் வர்மா தனது…
தமிழ்நாட்டில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், வாக்குப்பதிவு நாளன்று அனைத்துப் பணியாளர்களுக்கும் ஊதியத்துடன் கூடிய விடுமுறை வழங்குவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாகத்…
பிஎஃப் கணக்கு வைத்திருப்பவர்கள் இனி தங்கள் பணத்தைப் பெற வாரக்கணக்கில் காத்திருக்கத் தேவையில்லை; 'EPFO 3.0' என்ற புதிய டிஜிட்டல்…
உத்தரப் பிரதேச மாநிலத்தில், புதிய காலணி வாங்குவது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் ஒரு சிறுவன் தனது தம்பியைக் கத்தரிக்கோலால் குத்திக்…
கார் இன்சூரன்ஸ் செய்திருந்தாலும் பல நேரங்களில் க்ளைம் நிராகரிக்கப்படுவதற்கு முக்கியக் காரணம் பாலிசிதாரர்களின் கவனக்குறைவே ஆகும். பாலிசி காலாவதியாகி இருப்பது,…