ஆந்திராவில் புதுமண தம்பதிகள் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடால் கணவன் மனைவி இருவரும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திராவை சேர்ந்த சிரஞ்சீவி (30) என்பவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு கீதாலா(26) என்ற பெண்ணுடன் திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில் கணவன் மனைவியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்ட நிலையில் இது தொடர்பாக பெற்றோரிடம் கூறிய போது ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து வாழுங்கள் என்று அறிவுரை வழங்கியுள்ளனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக கணவன் மற்றும் மனைவியிடையே மீண்டும் தகராறு ஏற்பட்ட நிலையில் இதனால் விரத்தியில் இருந்த கீதாலா, நான் சாகப் போறேன், இப்போ உங்களுக்கு சந்தோசமா என்று கணவருக்கு மெசேஜ் அனுப்பியுள்ளார்.
இதனைப் படித்த சிரஞ்சீவி, எனக்கு ரொம்ப சந்தோசம் என்று பதில் அனுப்பியுள்ளார். இதனால் மனவேதனை அடைந்த பெண் தன்னுடைய வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சிறிது நேரம் கழித்து வீட்டிற்கு வந்த சிரஞ்சீவி மனைவி தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்து கதறி அழுதுள்ளார். மேலும் தன் மனைவியின் சாவுக்கு தானே காரணமாகிவிட்டேன் என நினைத்து அவரும் அதே கயிற்றில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டு உயிரை மாய்த்துக் கொண்டார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருமணம் தாண்டிய சட்டவிரோத உறவுகள் பெரும்பாலும் சமூகச் சீரழிவிற்கும், கொடூரமான குற்றங்களுக்கும் வழிவகுக்கின்றன என்பதற்கு ஓசூரில் நடந்த இந்தச் சம்பவம்…
மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலைத் தணிக்கும் நோக்கில், பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நாளை…
உலகப் பொருளாதாரத்தின் உயிர்நாடியாகக் கருதப்படும் ஹார்முஸ் ஜலசந்தியில் சமீபகாலமாக நிலவி வரும் பதற்றம், சர்வதேச சந்தையில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.…
பீகார் மாநிலம் மேற்கு சம்பாரண் மாவட்டத்தில் உள்ள பகா (Bagaha) அரசு மருத்துவமனையில், ஒரு பாதுகாப்பு ஊழியர் (Security Guard)…
குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் உள்ள ஒரு சொகுசு விடுதியின் (Resort) நீச்சல் குளத்தில், 33 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர்…
நீண்ட இடைவேளைக்குப் பிறகு, தனது அழகான மனைவியைக் காணப் போகிறோம் என்ற எதிர்பார்ப்புடன் ஒரு கணவன் வீட்டிற்கு விரைந்தார். ஆனால்,…