கோவை விமான நிலையத்தில், செய்தியாளர்களிடம் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் கூறியதாவது:
“தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தில் நடைபெறும், இந்து மத பண்டிகைகளுக்கு வாழ்த்து கூறுவதில்லை. ஆனால் கேரள முதல்வர் அழைப்பை ஏற்று, உலக ஐயப்ப மாநாட்டிற்கு செல்கிறார். இது எந்த வகையில் நியாயம்? இந்து மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில், முதல்வரின் செயல்கள் உள்ளன. இந்து மதத்தை பின்பற்றுபவர் என்ற அடிப்படையில், விசிக வன்னியரசு, ராமர் குறித்து பேசியதை வன்மையாக கண்டிக்கின்றேன். சமத்துவத்தையும், நீதியையும் போற்றுவது கம்பராமாயணமும் ராமரும்தான். சட்ட ஒழுங்கு சீர்குலைவு காரணமாகவே தமிழகத்தில் சாதிய கொலைகள் நடக்கிறது. இந்தக் கொலைகளை தடுக்க ஏன் சிறப்பு சட்டம் கொண்டுவர முடியவில்லை? தமிழ் முகமூடி அணிந்து கொண்டு சி.பி.ராதாகிருஷ்ணன் வருகிறார், என்று ஸ்டாலின் கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. தமிழர்களின் பாதுகாவலர் எனக் கூறப்படுபவர்கள் ஏன் ஒரு தமிழரை குடியரசு தலைவராக ஆதரிக்கவில்லை?” என்று அவர் தெரிவித்தார்.
