“அண்ணாமலை போட்ட அந்த கண்டிஷன்.. வானதி கேட்ட அந்த ஒரு பதவி”… கோவை வடக்கு தொகுதியில் நடக்கும் அதிகார யுத்தம்…!

Spread the love

2026 சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் நிறைவடைய இன்னும் சில மணி நேரங்களே உள்ள நிலையில், தமிழக பாஜகவில் ஏற்பட்டுள்ள “கோவை வடக்கு” தொகுதி மோதல் தேசிய அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் பாஜக போட்டியிடும் 27 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிடுவதில் ஏற்பட்டுள்ள அதீத தாமதத்திற்கு, மாநிலத் தலைவர் அண்ணாமலை மற்றும் வானதி சீனிவாசன் ஆகிய இருவருக்குமிடையே நிலவும் இந்த அதிகாரப் போட்டியே முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது. தங்களுக்குச் சாதகமான தொகுதிகள் கிடைக்காத பட்சத்தில் வேட்பாளர் பட்டியலை இறுதி செய்ய விடாமல் இரு தரப்பும் பிடிவாதம் காட்டுவது டெல்லி மேலிடத்தைத் திணறடித்துள்ளது.

கடந்த 2024 மக்களவைத் தேர்தலின் போது, கோவை நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்ட அண்ணாமலைக்கு, கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதியில்தான் மிக அதிகமான வாக்குகள் கிடைத்தன. அந்த செல்வாக்கை மனதில் வைத்து, நீண்ட நாட்களாகவே அண்ணாமலையின் ஆதரவாளர்கள் அங்கு தீவிர களப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கவுண்டம்பாளையம், சிங்காநல்லூர் போன்ற தொகுதிகளை அண்ணாமலை பரிசீலித்தாலும், இறுதியில் கோவை வடக்கு தொகுதியில் போட்டியிடுவதே தனது வெற்றிக்கு உத்தரவாதம் என அவர் உறுதியாக நம்புகிறார். இதனால்தான் தலைமை பரிந்துரைத்த மொடக்குறிச்சி தொகுதியை நிராகரித்துவிட்டு, கோவை வடக்கிற்காக அவர் மல்லுக்கட்டி வருகிறார்.

மறுபுறம், கோவை தெற்கு தொகுதியின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினரான வானதி சீனிவாசன், இந்த முறை தனது தொகுதியை மாற்றியே தீர வேண்டும் என்பதில் தீவிரமாக உள்ளார். கடந்த தேர்தலில் வெறும் 1,728 வாக்குகள் வித்தியாசத்தில் நூலிழையில் வெற்றி பெற்றதாலும், தற்போது அந்தத் தொகுதியை அதிமுக தன் வசம் வைத்துக்கொண்டு வேட்பாளரை அறிவித்துவிட்டதாலும், வானதிக்கு இருக்கும் ஒரே புகலிடம் கோவை வடக்கு மட்டுமே. தனது சிட்டிங் எம்.எல்.ஏ அந்தஸ்தைப் பயன்படுத்தி இந்த பாதுகாப்பான தொகுதியை அண்ணாமலைக்கு விட்டுக் கொடுக்க அவர் மறுத்து வருகிறார்.

இந்த இழுபறிக்குத் தீர்வாக வானதி சீனிவாசன் தரப்பிலிருந்து ஒரு அதிரடி நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் கசிந்துள்ளன. கோவை வடக்கு தொகுதியை அண்ணாமலைக்காக விட்டுக் கொடுக்க வேண்டுமானால், அதற்கு ஈடாகத் தனக்கு மத்திய அமைச்சர் பதவி வழங்கப்பட வேண்டும் என்பதே அந்த டிமாண்ட். குறிப்பாக, தமிழகத்தைச் சேர்ந்த தற்போதைய மத்திய இணையமைச்சர் ஒருவரின் இலாகாவைத் தனக்கு ஒதுக்க வேண்டும் என அவர் மேலிடத்தை வற்புறுத்தி வருவதாகக் கூறப்படுகிறது. மாநிலத் தலைவரா அல்லது தேசியப் பொறுப்பில் இருக்கும் மூத்த தலைவரா என்ற தர்மசங்கடத்தில் பாஜக தலைமை சிக்கியுள்ளது.

தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், அதிமுக மற்றும் திமுக கூட்டணிகள் ஏற்கனவே வேட்பாளர்களை அறிவித்துத் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. ஆனால், பாஜகவில் நிலவும் இந்த உட்கட்சிப் பூசலால் தொண்டர்கள் கடும் குழப்பத்தில் உள்ளனர். இன்னும் சில மணி நேரங்களே எஞ்சியுள்ள நிலையில், டெல்லி மேலிடம் அண்ணாமலையைச் சமாதானப்படுத்துமா அல்லது வானதி சீனிவாசனின் கோரிக்கையை ஏற்குமா என்பதுதான் தற்போதைய அரசியல் மில்லியன் டாலர் கேள்வி. இன்று வெளியாகவுள்ள இறுதிப் பட்டியலில் இந்த “கோவை யுத்தத்திற்கு” முற்றுப்புள்ளி வைக்கப்படுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Nanthini

Recent Posts

மெட்ரோ பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு..! இனி இந்த கார்டு இருந்தா தான்… மெட்ரோ நிர்வாகத்தின் அதிரடி அறிவிப்பு..!

சென்னை மெட்ரோ ரயிலில் பயணம் செய்யும் பயணிகளுக்கு மிக முக்கியமான அறிவிப்பு ஒன்றை மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ளது. இதன்படி,…

6 minutes ago

CSK ரசிகர்களுக்குப் பேரதிர்ச்சி.. ஐபிஎல் தொடரிலிருந்து விலகிய நட்சத்திர வீரர்.. ஏமாற்றத்தில் சென்னை டீம்..!!

ஐபிஎல் 2026 சீசன் தொடங்க உள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களுக்குப் பெரும் அதிர்ச்சியளிக்கும் விதமாக, இளம் நட்சத்திர…

8 minutes ago

“என் கண்ணே போயிடுச்சு” 1 கோடி ரூபாய்க்கு பிளாட் வாங்கி.. வீடு முழுக்க இருக்கும் புறவால் வந்த வினை… கோடிக்கணக்கில் முதலீடு செய்தவரின் கண்ணீர் வீடியோ..!!

நோய்டாவைச் சேர்ந்த ஆதர்ஷ் என்ற இளைஞர், சுமார் ஒரு கோடி ரூபாய் செலவழித்து வாங்கிய தனது சொகுசு ஃபிளாட்டின் (Flat)…

11 minutes ago

ரூ.600 கோடி சொத்துகளை மறைத்துள்ளார்… ரூ.180 கோடி வரி கட்டல.. சுந்தர்.சி மீது பரபரப்பு குற்றசாட்டு..!!

மதுரை மத்திய தொகுதி NDA (தேசிய ஜனநாயகக் கூட்டணி) வேட்பாளரான இயக்குநர் சுந்தர் சி மீது, வழக்கறிஞர் வாஞ்சிநாதன் சுமார்…

25 minutes ago

பெரும் பரபரப்பு.! “மாம்பழத்தில் விஷம்” பாமக ராமதாஸ் வெளியிட்ட பரபரப்பு அறிக்கை..!!

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனரான டாக்டர் ராமதாஸ், தேர்தல் நெருங்கும் வேளையில் "மாம்பழத்தில் விஷம்" எனும் தலைப்பில் வெளியிட்டுள்ள அறிக்கை…

32 minutes ago

BREAKING: தவெகவினர் என் மீது செருப்பை வீசினர்… திவ்யா சத்யராஜ் பரபரப்பு புகார்..!!

திமுக மாநிலத் துணைச் செயலாளரான திவ்யா சத்யராஜ், தேர்தல் பிரச்சாரத்தின் போது தவெக தொண்டர்கள் தன் மீது செருப்பு வீசியதாகக்…

35 minutes ago