“அட கொடுமையே… அனாதைன்னு நம்பி பொண்ணு கொடுத்த குடும்பம்… கணவரின் போனை பார்த்த… மனைவிக்கும் காத்திருந்த பேரதிர்ச்சி… அம்பலமான போலி பின்னணி…!”

By Swetha on ஆவணி 5, 2026

Spread the love

தெலுங்கானா மாநிலம் மேடக் மாவட்டம், துப்ரான் மண்டலத்தைச் சேர்ந்த மன்னே (60) என்பவரின் மனைவி சுஜாதா, தன் கணவரின் செல்போனில் பல பெண்களுடன் தகாத முறையில் உடலுறவு கொள்ளும் ஆபாச வீடியோக்கள் இருப்பதைக் கண்டு கடும் அதிர்ச்சியடைந்தார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், குடும்பத்தினரிடையே கடுமையான அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது.

குடும்பத்தினருடன் நெருக்கமாகப் பழகி வந்த மன்னேயின் இரண்டாவது மருமகன், தான் அனாதை இல்லை என்றும் தனக்கு தாய் மற்றும் தம்பி இருப்பதாகக் கூறி அதிர்ச்சி அளித்தார். மேலும், தான் வேறு மதத்தைச் சேர்ந்தவர் என்றும், தனது உண்மையான பெயர் ஹேமந்த் அல்ல, நசார் என்றும் கூறி தன் உண்மையான அடையாளத்தை வெளிப்படுத்தினார்.

   

போலியான அடையாளத்தைப் பயன்படுத்தி குடும்பத்தினரை ஏமாற்றியது மற்றும் செல்போனில் கிடைத்த ஆபாச வீடியோக்கள் குறித்து காவல் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாகப் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், தலைமறைவாக உள்ள நசாரைத் தீவிரமாகத் தேடி வருவதோடு மேலதிக விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.