என்ன ஒரு பித்தலாட்டம்… அந்த விஷயத்துக்காக புருஷனை புலி கொன்றதாக நாடகமாடிய பெண்… இறுதியில் நடந்த ட்விஸ்ட்… திடுக்கிடும் சம்பவம்…!

Spread the love

கர்நாடக மாநிலத்தில் அரசின் இழப்பீட்டுத் தொகை பெறும் பேராசையில் கணவரை மனைவியே கொலை செய்து நாடகமாடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மைசூர் அருகே வசித்து வந்த வெங்கடசாமி மற்றும் சல்லாபுரி தம்பதி எளிமையான வாழ்க்கை நடத்தி வந்துள்ளனர். வெங்கடசாமி விவசாயியாக இருந்து வரும் நிலையில் வனவிலங்கு தாக்கினால் அரசு அதிக அளவில் இழப்பீடு தரும் என்று தகவலை கேள்விப்பட்ட சல்லாபுரி பேராசையில் மூழ்கினார். இதனைத் தொடர்ந்து இரண்டு நாட்களுக்கு முன்பு உணவில் விஷம் கலந்து கொடுத்து கணவரை கொலை செய்துள்ளார். கொலை செய்த பிறகு கணவரின் உடலை வனப்பகுதியில் வீசிவிட்டு அவர் புலி தாக்கி இறந்து விட்டதாக போலி கதையை உருவாக்கியுள்ளார்.

இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்த அவர், வயலில் வேலை செய்த போது புலி வந்து கணவரை இழுத்துச் சென்றதாக தெரிவித்துள்ளார். போலீசார் கிராம மக்களுடன் சேர்ந்து தீவிரமாக தேடுதல் வேட்டை நடத்திய நிலையில் அழுகிய நிலையில் வெங்கடாசாமியின் உடல் கிடந்தது. உடலின் நிறம் மாறி இருந்ததால் போலீசாருக்கு சந்தேகம் இருந்தது. இதனைத் தொடர்ந்து அவரின் மனைவியை அழைத்துச் சென்று விசாரித்த போது உண்மை வெளிவந்தது. இழப்பீட்டுத் தொகை பெறும் ஆசையில் கணவருக்கு விஷம் கொடுத்து கொலை செய்ததை அவர் ஒப்புக்கொண்ட நிலையில் தற்போது போலீசார் அவரை கைது செய்து விசாரித்து வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Nanthini

Recent Posts

“விமானத்தில் பயங்கர குலுங்கல்…” வீடியோவைப் பகிர வேண்டாம் எனக் கெஞ்சிய ஊழியர்கள்…? 300 அடி கீழே சரிந்த ஏர் இந்தியா விமானம்…நடுவானில் அரங்கேறிய பயங்கரம்…!!

தாய்லாந்தின் புகெட்டில் இருந்து புதுடெல்லிக்கு வந்து கொண்டிருந்த ஏர் இந்தியா விமானம் (AI2379) இந்திய வான் எல்லைக்குள் நுழைந்தபோது, எதிர்பாராத…

14 minutes ago

ஷாக்… உதயநிதி கைது.. ஸ்கிரிப்ட் போட்ட அதிகாரி… விஜய்க்கு ஐடியா கொடுத்த டாப் ஐபிஎஸ் அதிகாரி?… திடுக்கிடும் பின்னணி…!

தஞ்சாவூர் காவிரி உரிமைப் போராட்டப் பொதுக்கூட்டத்தில் திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பேசிய பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து,…

24 minutes ago

“கணவருடன் இருக்கும் புகைப்படங்கள் திடீர் நீக்கம்…! கயல் சீரியல் நடிகை சைத்ரா ரெட்டிக்கு என்ன ஆச்சு…? 6 ஆண்டு கால திருமண வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளியா…?

சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வரும் 'கயல்' தொடரின் மூலம் தமிழகத்தின் முன்னணிச் சீரியல் நாயகியாக வலம் வருபவர் நடிகை சைத்ரா ரெட்டி.…

29 minutes ago

“ஐயோ… 3 மாதத்தில் ரூ22,000 கோடி கடன்… தவெக ஆட்சி முடியும்போது… ரூ20 லட்சம் கோடியாக உயரும்… தங்கம் தென்னரசுவின் ஷாக்கிங் பேட்டி…!”

தமிழகத்தில் ஜோசப் விஜய் தலைமையிலான தவெக அரசு 2026-27ஆம் ஆண்டிற்கான தனது முதல் பட்ஜெட்டை நிதியமைச்சர் மரிய வில்சன் மூலம்…

39 minutes ago

அச்சோ… வாழ்நாளில் முதன்முறையாகக் கடல் அலைகள்… 80 வயது தந்தைக்குச் மகன் கொடுத்த சர்ப்ரைஸ்… இணையத்தை கலக்கும் வீடியோ…!

ஒடிசா கடற்கரைக்குத் தனது 80 வயது முதிய தந்தையை முதன்முறையாக அழைத்துச் சென்ற மகனின் நெகிழ்ச்சியான வீடியோ இணையத்தில் பலரது…

52 minutes ago

எல்லாம் வெறும் ஏமாற்று வேலை…! “பழைய திட்டங்களுக்கு புது ஸ்டிக்கர்…” தவெக அரசின் முதல் பட்ஜெட்டை விளாசிய எடப்பாடி பழனிசாமி…!

தமிழகச் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட தவெக அரசின் முதல் நிதிநிலை அறிக்கையில் புதிய திட்டங்கள் எதுவும் இடம்பெறவில்லை என்றும், பழைய…

1 மணத்தியாலம் ago