என்ன ஒரு பித்தலாட்டம்… அந்த விஷயத்துக்காக புருஷனை புலி கொன்றதாக நாடகமாடிய பெண்… இறுதியில் நடந்த ட்விஸ்ட்… திடுக்கிடும் சம்பவம்…!

Spread the love

கர்நாடக மாநிலத்தில் அரசின் இழப்பீட்டுத் தொகை பெறும் பேராசையில் கணவரை மனைவியே கொலை செய்து நாடகமாடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மைசூர் அருகே வசித்து வந்த வெங்கடசாமி மற்றும் சல்லாபுரி தம்பதி எளிமையான வாழ்க்கை நடத்தி வந்துள்ளனர். வெங்கடசாமி விவசாயியாக இருந்து வரும் நிலையில் வனவிலங்கு தாக்கினால் அரசு அதிக அளவில் இழப்பீடு தரும் என்று தகவலை கேள்விப்பட்ட சல்லாபுரி பேராசையில் மூழ்கினார். இதனைத் தொடர்ந்து இரண்டு நாட்களுக்கு முன்பு உணவில் விஷம் கலந்து கொடுத்து கணவரை கொலை செய்துள்ளார். கொலை செய்த பிறகு கணவரின் உடலை வனப்பகுதியில் வீசிவிட்டு அவர் புலி தாக்கி இறந்து விட்டதாக போலி கதையை உருவாக்கியுள்ளார்.

இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்த அவர், வயலில் வேலை செய்த போது புலி வந்து கணவரை இழுத்துச் சென்றதாக தெரிவித்துள்ளார். போலீசார் கிராம மக்களுடன் சேர்ந்து தீவிரமாக தேடுதல் வேட்டை நடத்திய நிலையில் அழுகிய நிலையில் வெங்கடாசாமியின் உடல் கிடந்தது. உடலின் நிறம் மாறி இருந்ததால் போலீசாருக்கு சந்தேகம் இருந்தது. இதனைத் தொடர்ந்து அவரின் மனைவியை அழைத்துச் சென்று விசாரித்த போது உண்மை வெளிவந்தது. இழப்பீட்டுத் தொகை பெறும் ஆசையில் கணவருக்கு விஷம் கொடுத்து கொலை செய்ததை அவர் ஒப்புக்கொண்ட நிலையில் தற்போது போலீசார் அவரை கைது செய்து விசாரித்து வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Nanthini

Recent Posts

அப்பப்பா!… தமிழ்நாட்டில் சுட்டெரிக்கும் வெயில்… உங்களை தற்காத்துக் கொள்ள இந்த ‘5’ டிப்ஸ் போதும்…

தமிழ்நாட்டில் கோடை வெயில் சுட்டெரிக்கும் இந்த வேளையில், உடல் நலனைப் பேணுவது மிகவும் அவசியமான ஒன்று. வெப்ப அலைகளின் தாக்கத்திலிருந்து…

1 மணத்தியாலம் ago

“ஹார்முஸ் நீரிணை இனி எங்களுக்கு சொந்தம்”… அமெரிக்காவின் ஒரு அதிரடி முடிவால் ஆடிப்போன ஈரான்… மத்திய கிழக்கில் வெடிக்கப்போகும் அடுத்த உலகப்போர்…!

ஈரானுடனான அமைதிப் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, அந்நாட்டின் மீதான அழுத்தத்தை அதிகரிக்கும் நோக்கில் அமெரிக்கா தனது கடற்படை பலத்தை அரபிக்கடலில்…

1 மணத்தியாலம் ago

உங்க ஆதார் நம்பரைத் திருட முடியாது!… “இனி 12 இலக்க எண் தேவையில்லை.. இந்த 1 நம்பர் போதும்”… இந்த ஒரு ரகசிய ட்ரிக்கை உடனே ஃபாலோ பண்ணுங்க…!!!

இன்றைய காலகட்டத்தில் பள்ளிச் சேர்க்கை முதல் அரசு நலத்திட்டங்கள் வரை அனைத்திற்கும் ஆதார் கார்டு மிக முக்கியமான ஆவணமாக உள்ளது.…

2 மணத்தியாலங்கள் ago

“எடப்பாடிக்கு ரகசியங்கள் இருக்குனா.. என்கிட்ட ஆதாரமே இருக்கு!”… சாக்கடை மேல கல்லெறிந்தால்…” – EPS-க்கு செங்கோட்டையன் கொடுத்த மரண மாஸ் பதிலடி…!

அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டு தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், தற்போது கோபிசெட்டிபாளையம் தொகுதியில் தவெக வேட்பாளராகக் களம்…

2 மணத்தியாலங்கள் ago

“2012-ல் செங்கோட்டையன் பதவி பறிபோனது ஏன்?”… மனைவியே கொடுத்த புகாரா?…. உண்மையை அவிழ்த்துவிட்ட எடப்பாடி ….!

2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் தற்போதே அனல் பறக்கத் தொடங்கியுள்ள நிலையில், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும் (EPS),…

2 மணத்தியாலங்கள் ago

FLASH NEWS: வீட்டு கேஸ் சிலிண்டர் இனி 5 நாள்களில் டெலிவரி… காலையிலேயே குட் நியூஸ்…!

தமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகம் தற்போது மீண்டும் சீராகத் தொடங்கியுள்ளது பொதுமக்களிடையே நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக முன்பதிவு செய்த…

2 மணத்தியாலங்கள் ago