என்ன ஒரு பித்தலாட்டம்… அந்த விஷயத்துக்காக புருஷனை புலி கொன்றதாக நாடகமாடிய பெண்… இறுதியில் நடந்த ட்விஸ்ட்… திடுக்கிடும் சம்பவம்…!

By Nanthini on புரட்டாதி 14, 2025

Spread the love

கர்நாடக மாநிலத்தில் அரசின் இழப்பீட்டுத் தொகை பெறும் பேராசையில் கணவரை மனைவியே கொலை செய்து நாடகமாடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மைசூர் அருகே வசித்து வந்த வெங்கடசாமி மற்றும் சல்லாபுரி தம்பதி எளிமையான வாழ்க்கை நடத்தி வந்துள்ளனர். வெங்கடசாமி விவசாயியாக இருந்து வரும் நிலையில் வனவிலங்கு தாக்கினால் அரசு அதிக அளவில் இழப்பீடு தரும் என்று தகவலை கேள்விப்பட்ட சல்லாபுரி பேராசையில் மூழ்கினார். இதனைத் தொடர்ந்து இரண்டு நாட்களுக்கு முன்பு உணவில் விஷம் கலந்து கொடுத்து கணவரை கொலை செய்துள்ளார். கொலை செய்த பிறகு கணவரின் உடலை வனப்பகுதியில் வீசிவிட்டு அவர் புலி தாக்கி இறந்து விட்டதாக போலி கதையை உருவாக்கியுள்ளார்.

இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்த அவர், வயலில் வேலை செய்த போது புலி வந்து கணவரை இழுத்துச் சென்றதாக தெரிவித்துள்ளார். போலீசார் கிராம மக்களுடன் சேர்ந்து தீவிரமாக தேடுதல் வேட்டை நடத்திய நிலையில் அழுகிய நிலையில் வெங்கடாசாமியின் உடல் கிடந்தது. உடலின் நிறம் மாறி இருந்ததால் போலீசாருக்கு சந்தேகம் இருந்தது. இதனைத் தொடர்ந்து அவரின் மனைவியை அழைத்துச் சென்று விசாரித்த போது உண்மை வெளிவந்தது. இழப்பீட்டுத் தொகை பெறும் ஆசையில் கணவருக்கு விஷம் கொடுத்து கொலை செய்ததை அவர் ஒப்புக்கொண்ட நிலையில் தற்போது போலீசார் அவரை கைது செய்து விசாரித்து வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.