ஜார்கண்ட் சத்ராவில் மனிஷ்குமார் என்பவர் தன்னுடைய மைத்துனியை திருமணம் செய்வதற்கு பதிவு அலுவலகத்திற்கு வந்தபோது அவருடைய மனைவி சங்கீதா தேவி மற்றும் மாமியார் ஆகியோர் சண்டையில் ஈடுபட்டுள்ளார்கள். இரண்டு மணி நேரம் நீடித்த சண்டைக்கு பிறகு போலீசார் அந்த இளைஞரை காவலில் எடுத்து விசாரணை நடத்தியுள்ளார்கள். கடந்த 2021 ஆம் வருடம் சங்கீதா தேவியை திருமணம் செய்துள்ளார் மணீஷ். அவர்களுக்கு 9 மாத குழந்தையும் உள்ளது. இந்நிலையில் பாலில் விஷம் கலந்து கொடுத்து குழந்தையை கொல்ல மணீஷ் முயன்றதாக சங்கீதா குற்றம் சாட்டியுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையில் மணீஷ் தன்னுடைய மைத்துனியோடு காதல் கொள்ள தொடங்கியுள்ளார். இந்த விஷயம் நாளடைவில் அவர்கள் திருமணம் செய்யும் முடிவுக்கு கொண்டு சென்றுள்ளது. இதனையடுத்து அவர்கள் பதிவு அலுவலகத்திற்கு சென்று திருமணம் செய்து கொள்ள சென்றார்கள். அப்போது அவர் மனைவி மற்றும் மாமியாருக்கு விஷயம் தெரிந்து அவர்கள் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளார்கள். இதனை அடுத்து மாமியார் சோனி தேவி தன்னுடைய மகளையும், மருமகனையும் வெளியே பிடித்து இழுத்து காவல் நிலையத்திற்கு வருமாறு அழைத்து சென்றுள்ளார். இதனால் சுமார் 2 மணி நேரம் பரபரப்பு நிலவிய நிலையில் காவல்துறையினர் மணீஷை கைது செய்துகாவல் நிலையத்தில் அடைத்துள்ளார்கள். மனைவியின் தரப்பு வந்த பிறகு மேலும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீசார் தெரிவித்துள்ளார்கள்.
ராமநாதபுரத்தில் இருந்து பரமக்குடிக்கு நீட் தேர்வு எழுதச் சென்ற மாணவர் ஒருவர், தனது நுழைவுச் சீட்டை (Hall Ticket) அரசுப்…
டெல்லி கர்கர்தூமா நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றி வந்த அமன்குமார் சர்மா (30), தனது வீட்டின் கழிவறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட…
இந்தியாவின் கல்வி மையமான கோட்டாவில், போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்வதைத் தடுக்க விடுதி அறைகளில் உள்ள மின்விசிறிகள்…
சென்னையில் பாதுகாப்புப் பணியாளராகப் பணிபுரியும் பிங்கி நந்தி என்பவர், கடந்த ஐந்து ஆண்டுகளில் தனது வருமானம் எவ்வாறு உயர்ந்தது என்பது…
மகாராஷ்டிர மாநிலம் புனேவில் 65 வயது முதியவர் ஒருவர் 4 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்து, கல்லைத் தலையில்…
திரையுலகில் கிளாமர் மற்றும் குணச்சித்திர வேடங்களில் புகழ்பெற்ற நடிகை சோனா, சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகர் வடிவேலுவை கடுமையாகச் சாடிப்…