இன்றைய காலகட்டத்தில் கள்ளக்காதல் என்பது அதிகமாகிவிட்டது. நாளுக்கு நாள் கள்ளக்காதல் குறித்த செய்திகள் தான் அளவுக்கு அதிகமாக வெளிவந்து கொண்டிருக்கின்றன. அதன்படி கோவை சரவணம்பட்டி விநாயகபுரம் பகுதியை சேர்ந்த வயதுக்காரர் (43) பிரபல கார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகின்றார். இவருக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் வேறொரு பெண்ணுடன் பழகி வந்துள்ளார். அந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறிய நிலையில் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்துள்ளனர்.
ஒரு கட்டத்தில் இவரின் பழக்கம் மனைவிக்கு தெரிய வர மனைவி தனது மனக்குமுறலை கணவனிடம் கொட்டி தீர்த்தும் பயனில்லாமல் போனது. முடிவில் கணவனின் கள்ளக்காதலியான அந்த பெண்ணை செல்போனில் அழைத்து உங்களை நேரில் சந்தித்து பேச வேண்டும் என்று கூறியுள்ளார். அந்தப் பெண்ணும் கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்திற்கு வாருங்கள் என்று கூறியதும் இருவரும் பேருந்து நிலையத்தில் சந்தித்தனர். அப்போது வயதுக்காரர் மனைவி, கணவனின் மனைவிதான், எங்களுக்கு குழந்தை உள்ளது, எங்கள் குடும்பத்திற்கு தெரிந்தால் அவமானமாக போய்விடும். அதனால் என் கணவனை விட்டு விலகிச் சென்று விடுங்கள் என்று கணவனை வசியப்படுத்திய கள்ளக்காதலி இடம் கெஞ்சியுள்ளார்.
அப்போதைக்கு அந்தப் பெண் சரி என்று கூறிவிட்டு சென்ற நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியே சென்ற கணவர் திரும்ப வீட்டிற்கு வரவில்லை. பல இடங்களில் தேடியும் பயன் இல்லாததால் செல்போன் ஸ்விச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. அதே சமயம் அந்தப் பெண்ணின் அலைபேசியும் சத்தமில்லாமல் அடங்கிப் போய் இருந்ததால் தனது கணவர் கள்ளக்காதலையுடன் சென்று இருக்கலாம் என்ற சந்தேகம் வந்ததும் போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரைத் தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகிறார்கள். கள்ள காதலிக்காக மனைவியையும் இரண்டு குழந்தைகளையும் இரக்கமில்லாமல் விட்டுச் சென்ற இவரின் செயல் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
