Categories: சினிமா

வைரமுத்து மேல் திரும்ப திரும்ப ஒரே குற்றச்சாட்டு ஏன்…? ஓபனாக சொன்ன பிரபலம்…

Spread the love

வைரமுத்து ஒரு புகழ்பெற்ற தமிழ் திரைப்பட பாடல் ஆசிரியர் மற்றும் கவிஞர் ஆவார். இவர் தேனி மாவட்டம் பெரியகுளம் அருகில் உள்ள வடுகப்பட்டியில் பிறந்தவர். விவசாய குடும்பத்தில் பிறந்த வைரமுத்து சென்னை பச்சையப்பன் கல்லூரியில் தமிழ் இலக்கியம் பயின்றார். 1980 ஆம் ஆண்டு நிழல்கள் என்ற திரைப்படத்தில் இது ஒரு பொன்மாலைப் பொழுது என்ற பாடலை எழுதி தமிழ் சினிமாவில் பல செய்தியாக அறிமுகமானார்.

முதல் பாடலே வெற்றி பாடலாக வைரமுத்து அவர்களுக்கு அமைந்தது. தொடர்ந்து பல வெற்றி திரைப்படங்களில் முன்னணி கதாநாயகர்களுக்கு பாடல்களை எழுதியுள்ளார் வைரமுத்து. இவர் இதுவரை 6000திற்க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதி இருக்கிறார். இசைஞானி இளையராஜா மற்றும் ஏ ஆர் ரகுமான் ஆகியோருடன் இவர் இணைந்து எழுதி தயாரித்த பாடல்கள் பல புகழையும் விருதுகளையும் பெற்றது.

பாடல்கள் மட்டுமல்லாது வைரமுத்து அவர்கள் கட்டுரைகள், புதினம், கவிதை தொகுப்புகள் போன்ற பலவற்றை எழுதி இருக்கிறார். தனது அற்புதமான பாடல்களுக்காக கலைமாமணி விருது, சாகித்ய அகடாமி விருது, பத்மபூஷன் விருது சிறந்த தமிழ் திரைப்பட பாடல் ஆசிரியருக்கான தேசிய விருது போன்ற பல விருதுகளை வென்று இருக்கிறார் வைரமுத்து.

இந்நிலையில் சமீப வருட காலமாக வைரமுத்து அவர்களின் பெயர் பாலியல் குற்றச்சாட்டுகளுக்காக பேசப்பட்டு வருகிறது. அதற்கு காரணம் பாடகி சின்மயி தன்னை வைரமுத்து பாலியல் ரீதியான துன்புறுத்தலுக்கு ஆளாக்கினார் என்று me too என்ற ஒன்றை ஆரம்பித்து குற்றச்சாட்டியதுதான் தான் காரணம். அதற்கு பிறகு தற்போது பாடகி சுசித்ரா அவர்களும் வைரமுத்து அவர்களை பற்றி இந்த குற்றச்சாட்டையும் மீண்டும் வைத்திருக்கிறார்.

இதை பற்றி ஒரு நேர்காணலில் வலைப்பேச்சு அந்தணன் கூறும் பொழுது, ஏன் வைரமுத்து அவர்கள் மீது மீண்டும் மீண்டும் குற்றச்சாட்டு எழுகிறது என்றால் முதலில் சின்மயி ஒரு குற்றசாட்டை வச்சாங்க. அது உண்மையா கூட இருக்கலாம். அதற்குப் பிறகு வைரமுத்து அவர்கள் மேல் அந்த மாதிரி ஒரு பிம்பம் உருவாகிவிட்டது. அவர் சும்மா யார் மீதாவது தலையில் கை வைத்து ஆசீர்வாதம் செய்தால் கூட அவர் அந்த மாதிரி எண்ணத்தில் செய்திருப்பாரோ என்று பலரும் நினைக்க தொடங்கி விட்டனர். ஆனால் இவர் உள்ளே முடங்கி இருக்காமல் வெளியே வந்து இருக்கலாம். இதையெல்லாம் சந்தித்து இருக்கலாம். ஆனால் சுசித்ரா தற்போது கூறுவது எல்லாமே உண்மை போல் தெரியவில்லை என்று ஓபனாக கூறி இருக்கிறார் வலைப்பேச்சு அந்தணன்.

admin

Recent Posts

“ஷாருக்கான் மிஸ் ஆனா என்ன… அடுத்து மோடி தான்…” கெத்து காட்டும் ஆஸ்கர் இயக்குநர்… இணையத்தில் வெளியிட்ட ஷாக்கிங் தகவல்…!

ஆஸ்கர் விருது பெற்ற இயக்குநர் கெவின் மக்டொனால்ட், பாலிவுட் நடிகர் ஷாருக்கானை மையமாக வைத்து ஒரு ஆவணப்படம் எடுக்க சில…

2 மணத்தியாலங்கள் ago

வாழ்நாள் முழுவதும் பிச்சை… வீட்டில் 30 சாக்கு மூட்டைகளில் பல லட்சங்கள்… இறந்த மூதாட்டியின் சீக்ரெட் அம்பலம்… மிரண்டுபோன மக்கள்…!!

கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தைச் சேர்ந்த நூர் என்ற 68 வயது மூதாட்டி, அப்பகுதியில் பல ஆண்டுகளாக பிச்சை எடுத்து…

2 மணத்தியாலங்கள் ago

அச்சோ… என்ன ஒரு பாசம்… கொஞ்சம் கொஞ்சமாக பணம் சேமித்து… அம்மாவுக்காக டிவி வாங்கி கொடுத்த டெலிவரி பாய்… நெகிழ்ச்சியான தருணம்… இணையத்தில் பாராட்டும் நெட்டிசென்கள்…!

ஸ்விக்கி நிறுவனத்தில் டெலிவரி ஊழியராகப் பணியாற்றி வரும் இளைஞர் ஒருவர், தனது கடின உழைப்பால் கிடைத்த வருமானத்தில் இருந்து சிறுகச்…

2 மணத்தியாலங்கள் ago

தவறான கைது…! 19 நாள் சிறை… ஜப்பானில் இருந்துகொண்டே கர்நாடக அரசை பணிய வைத்த இளைஞர்… பெங்களூரு போலீஸ் செய்த அநீதி…!!

பெங்களூருவில் கடந்த 2019-ம் ஆண்டில் ஆங்கிலம் பயில வந்த ஜப்பான் நாட்டைச் சேர்ந்த ஹிரோதோஷி தனகா, தான் படித்த கல்வி…

2 மணத்தியாலங்கள் ago

பொட்டு வைக்கக்கூடாதா?… “என் அம்மாவுக்கு நடந்த அந்த கொடுமை”… கண்ணீருடன் சமூகத்தை சாடிய நடிகை அனசுயா… இணையத்தில் வெடித்த சர்ச்சை…!!

தொலைக்காட்சி தொகுப்பாளராக தனது பயணத்தைத் தொடங்கி, தெலுங்குத் திரையுலகில் 'புஷ்பா', 'ரங்கஸ்தலம்', 'க்ஷணம்' போன்ற வெற்றிப் படங்களின் மூலம் முன்னணி…

3 மணத்தியாலங்கள் ago

சைக்கோவா இவள்?… ரத்த வெள்ளத்தில் கணவன்…உடலை கூறுபோட்ட கொடூரம்… ஹரியானாவை உலுக்கிய பகீர் சம்பவம்…!!

ஹரியானா மாநிலம் குருக்ஷேத்ராவில் உள்ள ஒரு வாடகை வீட்டில், உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ராஜேஷ் மற்றும் அவரது மனைவி விம்லா…

3 மணத்தியாலங்கள் ago