சைக்கோவா இவள்?… ரத்த வெள்ளத்தில் கணவன்…உடலை கூறுபோட்ட கொடூரம்… ஹரியானாவை உலுக்கிய பகீர் சம்பவம்…!!

Spread the love

ஹரியானா மாநிலம் குருக்ஷேத்ராவில் உள்ள ஒரு வாடகை வீட்டில், உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ராஜேஷ் மற்றும் அவரது மனைவி விம்லா தேவி ஆகியோர் வசித்து வந்தனர். சம்பவத்தன்று கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட கடுமையான குடும்பத் தகராறு ஒரு கொடூரமான கொலையில் முடிந்துள்ளது. கணவரைக் கொன்ற பிறகு வீட்டின் மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற மனைவி விம்லா, படுகாயங்களுடன் மீட்கப்பட்டு தற்போது மருத்துவமனையில் போலீஸ் கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வருகிறார்.

சம்பவம் நடந்த மாலை வேளையில் சத்தம் கேட்டு மாடிக்குச் சென்ற வீட்டு உரிமையாளர், ரத்த வெள்ளத்தில் கிடந்த ராஜேஷின் உடல் உறுப்புகளை விம்லா ஒரு பையில் அடைக்க முயன்றதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். அவரைப் பார்த்த பதற்றத்திலேயே விம்லா கீழே குதித்துள்ளார். ராஜேஷின் உடலை பிரேதப் பரிசோதனை செய்ததில், அவரது வயிற்றில் 35 செ.மீ அளவுக்கு ஆழமாக வெட்டப்பட்டிருந்ததும், வலது சிறுநீரகம் மற்றும் கல்லீரலின் ஒரு பகுதி காணாமல் போயிருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடத்தில் இருந்து வெவ்வேறு அளவிலான மூன்று கத்திகளைக் கைப்பற்றியுள்ளனர்.

திருமணமாகி நீண்ட காலமாக குழந்தையில்லாத இந்த தம்பதிக்குள் அடிக்கடி சண்டை நடந்து வந்துள்ளது. மனைவி விம்லா மாந்திரீகச் சடங்குகளில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படும் நிலையில், இந்தக் கொலைக்கு அதுதான் காரணமா என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் விம்லாவிடம் இருந்து பெறப்படும் முழுமையான வாக்குமூலம் மற்றும் தடயவியல் ஆதாரங்களின் அடிப்படையில்தான், இந்த அதிர்ச்சிகரமான கொலைக்கான உண்மையான பின்னணி தெரியவரும் என காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

Gayathri

Recent Posts

“ஷாருக்கான் மிஸ் ஆனா என்ன… அடுத்து மோடி தான்…” கெத்து காட்டும் ஆஸ்கர் இயக்குநர்… இணையத்தில் வெளியிட்ட ஷாக்கிங் தகவல்…!

ஆஸ்கர் விருது பெற்ற இயக்குநர் கெவின் மக்டொனால்ட், பாலிவுட் நடிகர் ஷாருக்கானை மையமாக வைத்து ஒரு ஆவணப்படம் எடுக்க சில…

1 மணத்தியாலம் ago

வாழ்நாள் முழுவதும் பிச்சை… வீட்டில் 30 சாக்கு மூட்டைகளில் பல லட்சங்கள்… இறந்த மூதாட்டியின் சீக்ரெட் அம்பலம்… மிரண்டுபோன மக்கள்…!!

கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தைச் சேர்ந்த நூர் என்ற 68 வயது மூதாட்டி, அப்பகுதியில் பல ஆண்டுகளாக பிச்சை எடுத்து…

1 மணத்தியாலம் ago

அச்சோ… என்ன ஒரு பாசம்… கொஞ்சம் கொஞ்சமாக பணம் சேமித்து… அம்மாவுக்காக டிவி வாங்கி கொடுத்த டெலிவரி பாய்… நெகிழ்ச்சியான தருணம்… இணையத்தில் பாராட்டும் நெட்டிசென்கள்…!

ஸ்விக்கி நிறுவனத்தில் டெலிவரி ஊழியராகப் பணியாற்றி வரும் இளைஞர் ஒருவர், தனது கடின உழைப்பால் கிடைத்த வருமானத்தில் இருந்து சிறுகச்…

1 மணத்தியாலம் ago

தவறான கைது…! 19 நாள் சிறை… ஜப்பானில் இருந்துகொண்டே கர்நாடக அரசை பணிய வைத்த இளைஞர்… பெங்களூரு போலீஸ் செய்த அநீதி…!!

பெங்களூருவில் கடந்த 2019-ம் ஆண்டில் ஆங்கிலம் பயில வந்த ஜப்பான் நாட்டைச் சேர்ந்த ஹிரோதோஷி தனகா, தான் படித்த கல்வி…

1 மணத்தியாலம் ago

பொட்டு வைக்கக்கூடாதா?… “என் அம்மாவுக்கு நடந்த அந்த கொடுமை”… கண்ணீருடன் சமூகத்தை சாடிய நடிகை அனசுயா… இணையத்தில் வெடித்த சர்ச்சை…!!

தொலைக்காட்சி தொகுப்பாளராக தனது பயணத்தைத் தொடங்கி, தெலுங்குத் திரையுலகில் 'புஷ்பா', 'ரங்கஸ்தலம்', 'க்ஷணம்' போன்ற வெற்றிப் படங்களின் மூலம் முன்னணி…

2 மணத்தியாலங்கள் ago

“அய்யோ காப்பாத்துங்க”… திறந்தவெளி வடிகாலில் நழுவி விழுந்த சிறுமி… உயிரைப் பணயம் வைத்து தூக்கிய சிறுவன்… நெஞ்சை பதறவைக்கும் வீடியோ…!

விளையாடிக் கொண்டிருந்த ஒரு சிறுமி எதிர்பாராதவிதமாக வடிகால் வாய்க்காலில் நழுவி விழுந்து, மூழ்கும் அபாயத்திற்கு உள்ளானாள். நீச்சல் தெரியாததால் அவள்…

2 மணத்தியாலங்கள் ago