Categories: சினிமா

குணா படத்துக்கு பின் நடிகை ரோஷினி ஏன் எந்த படத்திலும் நடிக்கவில்லை… இயக்குனர் சந்தானபாரதி சொன்ன பதில்!

Spread the love

கமல்ஹாசன் நடிப்பில் உருவான பல தோல்வி படங்கள் காலம் தாண்டி ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகின்றன. ராஜபார்வை, விக்ரம், குணா, ஹேராம் போன்ற படங்களே அதற்கு உதாரணம். அந்த வகையில் கமல் நடிப்பில் 1991 ஆம் ஆண்டு உருவான திரைப்படம் குணா.

1991 ஆம் ஆண்டு தீபாவளிக்கு ரஜினியின் தளபதியோடு மோதிய குணா திரைப்படம் படுதோல்வி படமாக அமைந்தது. ஆனால் காலம் செல்ல செல்ல ரசிகர்களால் கொண்டாடப்பட்டு இப்போது ஒரு கல்ட் கிளாசிக்காக உள்ளது. படம் ஹிட்டாகவில்லை என்றாலும் அந்த படத்தின் பாடல்களும், படத்தில் முக்கியமானக் காட்சிகளை உருவாக்கிய குகைக் காட்சிகளும் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தன. கொடைக்கானலில் மனித நடமாட்டம் இல்லாத அந்த குகை அதன் பின்னர் சுற்றுலாப் பயணிகளை ஈர்த்து குணா குகை என்றே அழைக்கப்பட்டு வந்தது.

அங்கு வந்த சுற்றுலா பயணிகளில் சிலர் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவங்களும் நடந்துள்ளன. அதனால் இப்போது அந்த குகை பாதுகாப்பு வசதிகள் பொறுத்தி சுற்றுலா பயணிகளுக்கு பார்வைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் வெளியான மலையாள திரைப்படமான மஞ்சுல்லம் பாய்ஸ் இந்த குகையில் சிக்கிய ஒரு நபரை அவரின் நண்பர்கள் மீட்பது பற்றிய கதையாக உருவாகியுள்ளது. அதையடுத்து மீண்டும் குணா திரைப்படமும்  குணா குகையும் இப்போது மீண்டும் சினிமா ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகியுள்ளது.

குணா படத்தில் மற்றொரு ஆச்சர்யமாக அந்த படத்தில் நடித்த நடிகை ரோஷினி வேறு எந்த படத்திலும் அதன் பின்னர் நடிக்கவில்லை. இது பலருக்கும் ஆச்சர்யமாக இருந்தது. பலரும் அவர் இறந்துவிட்டார் என்றெல்லாம் புரளியைக் கிளப்பிவிட்டனர். ஆனால் அது உண்மையில்லை என்று விளக்கமளிக்கப்பட்டது.

இந்நிலையில் குணா படத்துக்குப் பிறகு ரோஷினி ஏன் எந்த படத்திலும் நடிக்கவில்லை என்பது குறித்து இயக்குனர் சந்தானபாரதி ஒரு நேர்காணலில் கூறியுள்ளார். அதில் “ரோஷினி திரைப்படத்தில் நடிக்கவே விருப்பம் இல்லை. அவர்கள் குடும்பம் மிகவும் வசதியான குடும்பம். மிகவும் மாடர்னான அவருக்கு சினிமா பிடிக்கவில்லை. தொழில்முறை நடிகையாக இருப்பது அவருக்கு செட்டாகவில்லை. அதனால்தான் அவர் குணா படத்துக்குப் பிறகு எந்த படத்திலும் நடிக்கவில்லை” எனக் கூறியுள்ளார்.

vinoth

Recent Posts

ஆதார் வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு.. ஜூன் 14-க்குள் இதைச் செய்யாவிட்டால் கட்டணம் வசூலிக்கப்படும்..!!

இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI), ஆதார் அட்டை வைத்திருப்பவர்கள் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை தங்களின் அடையாள மற்றும் முகவரிச்…

5 மணத்தியாலங்கள் ago

“உலகத்தைச் சீரழிக்கும் கொடுங்கோலர்கள்” வளங்களைச் சுரண்டி ஆயுதங்களில் முதலீடு… டொனால்ட் ட்ரம்பை மறைமுகமாகச் சாடிய போப்..!!

உலக நாடுகளின் இயற்கை வளங்களைச் சுரண்டி, அந்தப் பணத்தை மக்கள் நலனுக்குப் பயன்படுத்தாமல் ஆயுதங்களில் முதலீடு செய்யும் உலகத் தலைவர்களைப்…

5 மணத்தியாலங்கள் ago

“பிளான் பி” தயாரா…? எடப்பாடி தொகுதியில் விஜய்யின் அடுத்த மூவ் என்ன…? கலக்கத்தில் அதிமுக…!!

சேலம் மாவட்டத்தின் நட்சத்திரத் தொகுதியான எடப்பாடியில், வரும் ஏப்ரல் 23 சட்டமன்றத் தேர்தலில் சுமார் 61,000 இளம் வாக்காளர்கள் வெற்றியாளரைத்…

7 மணத்தியாலங்கள் ago

ஐஐஐடி படிப்பு.. ஆண்டுக்கு 17 லட்சம் சம்பளம்…. ஆனாலும் வேலையை விட்டது ஏன்….? வைரலாகும் இளைஞரின் உருக்கமான பதிவு…!!

டெல்லி ஐஐஐடியில் பட்டம் பெற்ற 24 வயது இளைஞர் சிராஜ் மதன், ஆண்டுக்கு 17 லட்சம் ரூபாய் ஊதியம் தரும்…

7 மணத்தியாலங்கள் ago

இன்னும் ஒரு வாரம் தான் டைம்…. எனக்காக இதைச் செய்யுங்க…! பெண்களுக்கு விஜய் விடுத்த ‘விசில்’ கோரிக்கை…!!

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான விரிவான தேர்தல் அறிக்கையை இன்று சென்னையில் வெளியிட்டார். திருக்குறளின்…

7 மணத்தியாலங்கள் ago

“தீட்டு” – உயிரை விட மேலானதா?… என் அம்மாவிற்கு நேர்ந்தது இன்று அந்தப் பெண்ணிற்கு மரணம்… சமூகத்தின் கண்களைத் திறக்கப்போகும் ஒரு பதிவு…!!!

மிகவும் கனமான மற்றும் வேதனையான ஒரு விஷயத்தைப் பகிர்ந்துள்ளீர்கள். ஒரு பூஜை  வழிபாட்டிற்காகத் தனது ஆரோக்கியத்தைப் பணையம் வைத்து, 18…

7 மணத்தியாலங்கள் ago