#image_title
தமிழ் சினிமாவின் போக்கை மாற்றிய ஒரு சில இயக்குனர்களில் பாரதிராஜாவும் ஒருவர். அவர் இயக்கத்தில் வெளியான 16 வயதினிலே திரைப்படம் தமிழ் சினிமாவையே புரட்டி போட்டது. தொடர்ந்து ரத்தமும் சதையுமான கிராமிய மணம் கொண்ட படங்களை கொடுத்து தமிழ் சினிமா ரசிகர்களின் இதயங்களைக் கொள்ளை கொண்டார்.
அவர் தன்னை ஒரு இயக்குனராக நிலைநிறுத்திக் கொண்ட பின்னரும் தனது படங்களுக்கு முன்னணி நடிகர்களை தேடி செல்லாமல் புதுமுக நடிகர்களையே பெரும்பாலும் பயன்படுத்தினார். அதுவே அவரின் வெற்றிக்குக் காரணமாக அமைந்தது. முதல் பட ஹிட் கொடுத்த போது ஏதோ அதிர்ஷ்டத்தில் வென்றதாக பலரும் சொன்னார்கள். ஆனால் தொடர்ந்து 20 ஆண்டுகளுக்கும் மேலாக வெற்றிப் படங்களாகக் கொடுத்து தன்னை நிலைநிறுத்திக் கொண்டார்.
பாரதிராஜா என்னதான் கிராமத்துப் படங்களாக எடுத்தாலும், அவர் அறிமுகப்படுத்திய அல்லது தன் படங்களில் நடிக்கவைத்த ஹீரோயின்கள் பெரும்பாலானோர் வெள்ளையாக அழகாக இருப்பார்கள். ஒரு கிராமத்துப் பெண் இப்படியா இருப்பார் என்று ரசிகர் ஒருவர் சினிமா பத்திரிக்கையாளரும், பாரதிராஜாவின் முன்னாள் உதவி இயக்குனருமான சித்ரா லட்சுமணனிடம் கேட்டுள்ளார்.
அதற்கு சித்ரா லட்சுமணன் அளித்த பதிலில் ”எல்லா கிராமத்துப் பெண்களும் சிகப்பா அழகா இருக்க மாட்டாங்க என்று வேண்டுமானால் சொல்லலாம். ஆனால் கிராமத்துப் பெண்கள் கருப்பாதான் இருப்பாங்கன்னும் சொல்ல முடியாது. நானே நிறைய வெள்ளையான கிராமத்துப் பெண்களைப் பார்த்திருக்கேன். அப்படிப்பட்ட பெண்களை பாரதிராஜா தன்னோட படத்துக்கான கதாநாயகியாக கற்பனைப் பண்ணிருப்பாருன்னு நெனச்சுக்குங்களேன்.” என்று பதிலளித்துள்ளார்.
என்னதான் வெள்ளையான பெண்களை நடிக்க வைத்தாலும், அவர்களை மேக்கப் மூலமாக கிராமத்துப் பெண்கள் போலவே மாற்றி நடிக்கவைத்துவிடுவார் என்பதுதான் பாரதிராஜாவின் பலம்.
சிரிப்புக்கும் குதூகலத்திற்கும் பெயர்போன 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சி, தற்போது சர்ச்சைகளுக்கும் சென்டிமென்ட் காட்சிகளுக்கும் களமாக மாறியிருப்பது ரசிகர்கள் மத்தியில்…
மத்திய கிழக்கில் நிலவும் மோதல்கள் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தி ஏற்கனவே முடங்கியுள்ள நிலையில், தற்போது ஆசியாவின் மற்றொரு முக்கியப் பகுதியான…
தூத்துக்குடி மட்டக்கடை கோவில் தெருவைச் சேர்ந்த பாலசுப்பிரமணியனின் மனைவி பிரேமா (58), தனது வீட்டில் வழக்கம்போல் குத்துவிளக்கு ஏற்றி வைத்து…
2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், தமிழக அரசியல் களம் முன்னெப்போதும் இல்லாத வகையில் போர்க்களமாக மாறியுள்ளது. குறிப்பாக,…
தமிழக அரசியல் களத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைந்துள்ள மூத்த அரசியல்வாதி கே.ஏ.…
மகாராஷ்டிர மாநில அமைச்சர் சஞ்சய் சிர்சாத், சத்ரபதி சம்பாஜிநகர் மாநகராட்சி அலுவலகம் தொடர்பாகத் தெரிவித்துள்ள கருத்துக்கள் மாநில அரசியலில் பெரும்…