சீனாவின் பல்வேறு பகுதிகளில் திங்கட்கிழமை இரவு முதல் பெய்து வரும் வரலாறு காணாத கனமழை மற்றும் சூறாவளி காரணமாக ஏற்பட்ட கோர வெள்ளத்தில் சிக்கி இதுவரை 20 பேர் உயிரிழந்துள்ளனர், 331-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். ‘மாய்ஷாக் சூறாவளி புயலால் உருவான இந்தத் திகைப்பூட்டும் இயற்கை பேரிடரால் பல்லாயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர். இதற்கிடையில், குவாங்சி ஜுவாங் தன்னாட்சிப் பகுதியில் உள்ள ஹெங்ஜோ என்ற இடத்தில் பலத்த மழையால் ஒரு நச்சுயிரிப் பண்ணை இடிந்து விழுந்தது. இதனால் அங்கிருந்த சுமார் 900 பாம்புகள் வெள்ள நீரில் தப்பியோடியதால் அப்பகுதி மக்களிடையே பெரும் பீதி ஏற்பட்டுள்ளது. இடுப்பளவு வெள்ள நீரில் நின்றுகொண்டு மக்கள் மூங்கில் கம்புகளுடன் பாம்புகளைத் தேடும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. தப்பியோடிய பாம்புகளில் பெரும்பாலானவை விஷமற்றவை என்றாலும், அவற்றை வெறும் கைகளால் பிடிக்க வேண்டாம் என்றும், வலைகள் மற்றும் பிரத்யேகக் கருவிகள் கொண்டு அவற்றை மீட்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருவதாகவும் உள்ளூர் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
இந்த மோசமான பேரிடரைத் தொடர்ந்து, சீன அதிபர் ஷி ஜின்பிங் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை முழு வீச்சில் முடுக்கிவிடுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். நாடு முழுவதும் சுமார் 62 நதிகள் ஆபத்துக் கட்டத்தைத் தாண்டி வெள்ளப்பெருக்குடன் ஓடிக்கொண்டிருக்கும் வேளையில், கன்சு மாகாணத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 5 பேர் உயிரிழந்துள்ளனர்; மேலும் 12 பேரைத் தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. கடுமையான காற்று மற்றும் இடியுடன் கூடிய மழையினால் ஆயிரக்கணக்கான வீடுகள் சேதமடைந்துள்ள நிலையில், மக்களின் உயிர் மற்றும் உடைமைகளைப் பாதுகாக்க முன்னெச்சரிக்கை மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்துமாறு அதிபர் வலியுறுத்தியுள்ளார். வெள்ள பாதிப்பு மற்றும் தப்பிய பாம்புகளின் அச்சுறுத்தல் காரணமாகப் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு நிலைமை மிகவும் உன்னிப்பாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
மும்பையின் லால்பாக் பகுதியில் அமைந்துள்ள கிளெனேகிள்ஸ் மருத்துவமனை, 15.59 மீட்டர் உயரத்தில் 'நம்பிக்கையின் உறுப்பு' என்ற பிரம்மாண்ட சிற்பத்தை திறந்து…
செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் பகுதியில் ஃபாஸ்ட் ஃபுட் கடை நடத்தி வந்த வீரா (எ) வீரமுத்துகிருஷ்ணன் (26) என்பவர்,…
திஷா சாலியன் வழக்கு தொடர்பாகத் தொடரப்படும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் குறித்து சிவ் சேனா தலைவர் ஆதித்யா தாக்கரே தனது மௌனத்தைக்…
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே கொல்லன்வயல் கிராமத்தைச் சேர்ந்த தங்கராசுவின் மகன் முருகன் (27). இவருக்கும் வைத்தியநாதன் வயல் கிராமத்தைச்…
கர்நாடக மாநிலம் சகலேஷ்பூர் தாலுகா, ஹெத்தூர் ஹோப்ளியில் உள்ள வலலஹள்ளி குடிஜே பகுதியில் ஸ்ரீதேவி லாட்ஜ் செயல்பட்டு வருகிறது. இந்த…
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவரின் மகள் ரேணுகா (25). இவருக்குத் திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ள…