விஜய்யின் பேச்சைக் கேட்டுத் தனது 5 வயது மகன் பிடிவாதம் செய்ததால், தனக்கு மன உளைச்சல் ஏற்பட்டுள்ளதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (விசிக) நிர்வாகி ஒருவர் புகார் அளித்துள்ளார். பெற்றோரிடம் அடம் பிடித்துத் தவெக-விற்கு வாக்களிக்கச் செய்யுமாறு குழந்தைகளிடம் விஜய் கேட்டுக்கொண்டதைக் கண்டித்து, அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்தப் புகாரில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, குழந்தைகளை அரசியலில் ஈடுபடுத்துவது போன்ற விஜய்யின் கருத்துக்கள் சர்ச்சையைக் கிளப்பியுள்ளன. தனது மகனின் செயலால் ஏற்பட்ட மன உளைச்சலுக்கு விஜய்யே காரணம் எனக் கூறி, இந்தப் புகார் மனு காவல்துறை வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே பதற்றம் அதிகரித்து வரும் சூழலில், ஹார்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் அமெரிக்கப் போர்க்கப்பல்களைத் தாக்க…
கர்நாடக மாநிலம் விஜயப்புராவில் மூன்று வயது சிறுவன் ஒருவன் தெருநாயால் மிகக் கொடூரமாகத் தாக்கப்பட்டு, சுமார் 30 மீட்டர் தூரம்…
வெனிஸ் பைனாலே 2026 (Venice Biennale 2026) கலைக் கண்காட்சியில், கடல் மட்டம் உயர்ந்து வருவது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த…
மத்தியப் பிரதேச மாநிலம் ஜாபுவாவில் நிகழ்ந்த ஒரு சாலை விபத்தின் போது, கார் ஓட்டுநரின் துரிதமான செயல்பாட்டால் இருவர் உயிர்…
தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய், முதலமைச்சராகப் பதவியேற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தவெக இதுவரை சட்டப்பேரவையில்…
சிதம்பரம் தொகுதியில் திமுக கூட்டணியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு 5,747 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற மனிதநேய ஜனநாயக கட்சியின்…