leaf

வீட்டு வாசலில் மாவிலை தோரணம் கட்டுவது எதற்காக…? அதன் முக்கியத்துவம் என்ன…?

By admin on கார்த்திகை 27, 2024

Spread the love

இந்து வழிபாட்டில் பல வித பூஜைகள் புனஸ்காரங்கள் விசேஷ நாட்கள் உண்டு. இந்த விசேஷ நாட்களில் நாம் பூஜை செய்யும் போது கடவுளுடைய அருள் அதிகமாக கிடைக்கும் என்று கூறப்படுகிறது. ஆனால் இந்த விசேஷமான நாட்களில் நாம் பூஜைக்காக ஆயத்தமாகும் போது முதலாவதாக நாம் கட்டுவது நம் வீட்டு வாசலில் மாவிலை தோரணம் தான். வீட்டில் மாவிலை தோரணம் எதற்காக கட்டுகிறார்கள் அதன் முக்கியத்துவம் என்ன என்பதை பற்றி இனி காண்போம்.

   

மாவிலை தோரணம் நம் வீட்டு வாசலில் காட்டும்போது அது ஒரு பாசிட்டிவ் உணர்வை நமக்கு ஏற்படுத்தும். வீட்டில் ஏதாவது வாஸ்து குறை இருந்தாலும் அதை மாவிலை தோரணம் நீக்கிவிடும் என்று கூறப்படுகிறது. மேலும் இது காற்றையும் சுத்தப்படுத்துகிறது. விசேஷ நாட்களில் அதிகப்படியான நபர்கள் வீட்டிற்கு வருவது செல்வது போல் இருப்பதால் இந்த மாவிலை தோரணம் காற்றை சுத்தப்படுத்துகிறது.

   

வீட்டு வாசலில் மாவிலை கட்டுவது பாரம்பரியமாக நாம் முன்னோர் காலத்தில் இருந்து செய்து வந்த ஒன்றுதான். புது வீடு கட்டி வீடு கிரகப்பிரவேசம் செய்யும் போது திருமணம் சடங்கு மற்றும் பல விசேஷங்களுக்கு மாவிலை கட்டுவது வீட்டில் சுபிக்ஷத்தை உண்டாக்கும். வீட்டில் இருக்கும் அனைத்து தீய சக்திகளும் நீங்கி தெய்வ சக்தியை ஈர்க்கக்கூடியது இந்த மாவிலை தோரணம் என்று கூறுகிறார்கள்.

 

வீட்டின் உயிர் சக்தி இருப்பதே நிலை வாசலில் தான். அதனால் தான் நிலை வாசலில் மாவிலை தோரணம் கட்ட சொல்லி நம் முன்னோர்கள் கூறியிருக்கிறார்கள். மாவிலை என்பது மகா இலை அல்லது மகாசக்தி பொருந்திய இலை என்பதாகும். காலப்போக்கில் தான் அது மாவிலை என்று ஆனது.

இந்த மாவிலைக்கு தெய்வ சக்தியை ஈர்க்கும் தன்மை இருப்பதால் கலசம் வைத்தாலும் அதில் மாவிலை வைத்து தான் தேங்காய் வைப்பார்கள். ஏனென்றால் பூஜையின் போது கூறும் மந்திரங்கள் ஸ்லோகங்கள் போன்றவற்றை ஈர்க்கக்கூடிய சக்தி மாவிலைக்கு உண்டு. வீட்டில் எந்த வித தோஷம் இருந்தாலும் அந்த தோஷத்தை நீக்க வல்லது மாவிலை. ஆகையால் வீட்டு வாசலில் மாவிலை கட்டுவது இந்து மத வழிபாட்டில் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.