“விஜய் காலடியில் 29 தொகுதிகள்”… கொங்கு மண்டலத்தை வளைக்கும் தவெக…. . ஆளுங்கட்சி அமைச்சர்களுக்கு ‘செக்’ வைத்த செங்கோட்டையன்….!

Spread the love

தமிழக அரசியல் களம் 2026 சட்டமன்றத் தேர்தலை நோக்கி நகர்ந்து வரும் நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் செயல்பாடுகள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன. கோவையில் நடைபெற்ற கட்சியின் மாவட்டப் பொதுக்கூட்டத்தில் பேசிய மூத்த நிர்வாகி செங்கோட்டையன், வரும் தேர்தலில் கொங்கு மண்டலத்தில் உள்ள 29 தொகுதிகளிலும் தவெக அமோக வெற்றி பெற்று, அந்த வெற்றிக் கனியைத் தலைவர் விஜய்யின் காலடியில் சமர்ப்பிப்பேன் என்று அதிரடியாகச் சபதம் ஏற்றார்.

தற்போதுள்ள ஆளும் கட்சி அமைச்சர்களுக்குத் தவெகவின் எழுச்சி ஒரு ‘சிம்ம சொப்பனமாக’ விளங்குவதாகக் குறிப்பிட்ட அவர், விஜய்யின் தலைமையில் இணைந்த பிறகு தனக்கு 20 வயது குறைந்தது போன்ற ஒரு புத்துணர்ச்சியும் துடிப்பும் கிடைத்துள்ளதாக நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார். ஆளும் கட்சியினரின் செயல்பாடுகள் மீது கடும் விமர்சனங்களை முன்வைத்த அவர், கொங்கு மண்டலத்தின் 29 தொகுதிகளிலும் தவெகவின் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது என்று நம்பிக்கையுடன் முழங்கினார்.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாகவும், பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்றும் சாடிய செங்கோட்டையன், திமுக அரசு பெரும் பொருட்செலவில் நடத்தும் கூட்டங்களில் பண பலம் மட்டுமே இருப்பதாகவும், ஆனால் தவெகவின் கூட்டங்களில் தொண்டர்களின் தன்னெழுச்சியான எழுச்சியைக் காண்பதாகவும் கூறினார். ஒரு ரூபாய் கூட பணம் கொடுக்காமல் மக்கள் இவ்வளவு திரளாகக் கூடியிருப்பது, கட்சியின் கொள்கை மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையைக் காட்டுவதாக அவர் பெருமிதம் கொண்டார்.

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அரசியலுக்கு வந்தபோது எத்தகைய விமர்சனங்களைச் சந்தித்தாரோ, அதே போன்ற விமர்சனங்களை இன்று விஜய்யும் சந்திப்பதாகக் குறிப்பிட்ட அவர், எம்.ஜி.ஆரைப் போலவே விஜய்யும் வரலாறு படைப்பார் என்று உறுதிபடத் தெரிவித்தார். 2026 தேர்தலில் விஜய் யாரைக் கைகாட்டுகிறாரோ அவரே சட்டமன்ற உறுப்பினராகத் தேர்வாகப் போவது உறுதி என்றும், அந்த மாற்றத்திற்காகப் புலம்பெயர்ந்த தமிழர்கள் கூட தமிழகம் வந்து வாக்களிக்கத் தயாராக இருப்பதாகவும் தனது உரையில் அவர் சுட்டிக்காட்டினார்.

Nanthini

Recent Posts

பஞ்சர் கடைக்காரருக்கு ₹100 கோடி ஜிஎஸ்டி நோட்டீஸ்… லோன் வாங்க ஆவணம் கொடுத்தவருக்கு நேர்ந்த அதிர்ச்சி…!!

உத்தரபிரதேசத்தில் ஒரு பஞ்சர் கடை நடத்தி வரும் மெக்கானிக் பிரஜாபதி என்பவருக்கு ரூ100 கோடி வர்த்தகத்திற்கான ஜிஎஸ்டி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.…

3 மணத்தியாலங்கள் ago

BREAKING: எந்த கூட்டணியில் இல்லை… ஸ்டாலினுக்கு அதிர்ச்சி…!!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தான் எந்தக் கூட்டணியிலும் இல்லை என்று அறிவித்துள்ளது. இது மு.க.ஸ்டாலினுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதோடு, திமுகவுக்கு…

3 மணத்தியாலங்கள் ago

பள்ளி மாணவர்களுக்கு HAPPY NEWS… 3 நாட்கள் விடுமுறை… அரசு வெளியிட்ட உத்தரவு…!!

மொஹர்ரம் பண்டிகையை முன்னிட்டு வரும் வெள்ளிக்கிழமை 26.06.2026 அன்று அரசு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அன்று பள்ளிகள், கல்லூரிகள்,…

3 மணத்தியாலங்கள் ago

“வெறும் 50 ரூபாய் தக்காளி சண்டை” வீடுபுகுந்து கஸ்டமரின் மண்டையை உடைத்த கடைக்காரர்… வெளியான பகீர் பின்னணி..!!

மத்தியப் பிரதேச மாநிலம் பன்னா மாவட்டத்தில் உள்ள தராம்பூர் காவல் எல்லைக்குட்பட்ட சதைனி கிராமத்தில், தக்காளி விலையைக் கேட்டு ஏற்பட்ட…

3 மணத்தியாலங்கள் ago

“அரசு சம்பளத்துல சுகமான தூக்கம்…!” பாட்னா சந்திப்பில் அரங்கேறிய கூத்து… நெட்டிசன்கள் ஆக்ரோஷம்… அலறியடித்து ஓடிவந்த இரயில்வே நிர்வாகம்…!!

பீகார் மாநிலத்தின் பாட்னா சந்திப்பு இரயில் நிலையத்திலிருந்து அதிர்ச்சியூட்டும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அங்குள்ள…

3 மணத்தியாலங்கள் ago

முதல்வர் விஜய்யை அன்ஃபாலோ செய்த த்ரிஷா… நடந்தது என்ன…? இணையத்தில் விவாதத்தை கிளப்பும் நெட்டிசென்கள்…!!

சமூக வலைதளங்களில் பரவி வரும் நடிகர் மற்றும் தமிழக முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையேயான விவாகரத்து…

4 மணத்தியாலங்கள் ago