சமூக வலைதளங்களில் பிரபலமான ‘வாட்டர் மெலன்’ திவாகர், சென்னை நசரத்பேட்டை காவல் நிலையத்தில் அளித்துள்ள புகார் சின்னத்திரை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பூந்தமல்லி அருகே உள்ள ஈவிபி பிலிம் சிட்டியில் தனியார் தொலைக்காட்சி சமையல் நிகழ்ச்சி படப்பிடிப்பின் போது, தன்னுடன் பணியாற்றிய மாகாபா ஆனந்த், கானா வினோத், புகழ் மற்றும் அசார் ஆகியோருடன் ஏற்பட்ட வாக்குவாதம் மோதலாக மாறியதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த மோதலின் போது அவர்கள் இரும்பு கம்பியால் தன்னைத் தாக்கியதில் காயம் ஏற்பட்டதாகக் கூறி, சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என திவாகர் தனது புகாரில் வலியுறுத்தியுள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக நடிகர் புகழ் மற்றும் கானா வினோத் ஆகியோர் நசரத்பேட்டை காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளனர். திவாகரின் குற்றச்சாட்டுகளை முற்றிலுமாக மறுத்துள்ள அவர்கள், சுய விளம்பரத்திற்காகவே அவர் இது போன்ற பொய்யான புகாரை அளிப்பதாகத் தெரிவித்துள்ளனர். மேலும், இந்த விவகாரம் தொடர்பாகத் தேவைப்பட்டால் தங்கள் தரப்பிலும் புகார் அளிக்கத் தயாராக இருப்பதாக அவர்கள் போலீசாரிடம் கூறியுள்ளனர். தற்போது இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த போலீசார், இச்சம்பவம் குறித்துத் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
"தாயன்பின் ஆழத்தை அளவிட முடியாது" என்பதற்குச் சான்றாக, ஒரு தாயின் போராட்டத்தை விவரிக்கும் நெகிழ்ச்சியான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி…
"என் தற்கொலை குறிப்பை யார் வாசித்தாலும் அதை முழுமையாக வாசியுங்கள்; எனது இறப்பிற்குப் பிறகு என் தந்தை எனது உடலைத்…
ஈரானுடனான போரில் திடீர் திருப்பமாக, போர்நிறுத்த காலத்தை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் காலவரையின்றி நீட்டித்துள்ளார். ஆரம்பத்தில் ஈரானை மிரட்டி…
துபாயைச் சேர்ந்த 23 வயது இளம்பெண்ணான சாரா, எவ்வித விலையுயர்ந்த மருத்துவ சிகிச்சைகளும் இன்றி தனது முகப்பருக்களைக் குணப்படுத்திய ரகசியத்தைப்…
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகைக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை எவ்வித சோதனையும் நடத்தவில்லை என்று அந்தத் துறை…
நடுத்தர வர்க்கக் குடும்பம் ஒன்று முதன்முறையாக ஏசி (AC) வாங்கியபோது, அந்த வீட்டின் தாய் காட்டிய நெகிழ்ச்சியான எதிர்வினை குறித்த…