“இரும்பு கம்பியால் தாக்குதல்?… CWC செட்டில் ரத்தக் கறை.. திவாகர் புகாரால் கதிகலங்கிய புகழ், மாகாபா… ஷாக்கிங் வீடியோ…!

By Nanthini on சித்திரை 12, 2026

Spread the love

சமூக வலைதளங்களில் பிரபலமான ‘வாட்டர் மெலன்’ திவாகர், சென்னை நசரத்பேட்டை காவல் நிலையத்தில் அளித்துள்ள புகார் சின்னத்திரை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பூந்தமல்லி அருகே உள்ள ஈவிபி பிலிம் சிட்டியில் தனியார் தொலைக்காட்சி சமையல் நிகழ்ச்சி படப்பிடிப்பின் போது, தன்னுடன் பணியாற்றிய மாகாபா ஆனந்த், கானா வினோத், புகழ் மற்றும் அசார் ஆகியோருடன் ஏற்பட்ட வாக்குவாதம் மோதலாக மாறியதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த மோதலின் போது அவர்கள் இரும்பு கம்பியால் தன்னைத் தாக்கியதில் காயம் ஏற்பட்டதாகக் கூறி, சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என திவாகர் தனது புகாரில் வலியுறுத்தியுள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக நடிகர் புகழ் மற்றும் கானா வினோத் ஆகியோர் நசரத்பேட்டை காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளனர். திவாகரின் குற்றச்சாட்டுகளை முற்றிலுமாக மறுத்துள்ள அவர்கள், சுய விளம்பரத்திற்காகவே அவர் இது போன்ற பொய்யான புகாரை அளிப்பதாகத் தெரிவித்துள்ளனர். மேலும், இந்த விவகாரம் தொடர்பாகத் தேவைப்பட்டால் தங்கள் தரப்பிலும் புகார் அளிக்கத் தயாராக இருப்பதாக அவர்கள் போலீசாரிடம் கூறியுள்ளனர். தற்போது இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த போலீசார், இச்சம்பவம் குறித்துத் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.