#image_title
1990-ஆம் ஆண்டு ரிலீசான புது வசந்தம் படம் மூலம் இயக்குனராக திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தவர் விக்ரமன். அந்த படத்தின் வெற்றியை அடுத்து அவர் அடுத்தடுத்து ஹிட் படங்களைக் கொடுத்து 90 களில் முன்னணி இயக்குனராக வலம் வந்தார்.
அதன் பின்னர் அவர் இயக்கிய நான் பேச நினைப்பதெல்லாம், கோகுலம், சூர்யவம்சம், பூவே உனக்காக, வானத்தைப் போல போன்ற சூப்பர் ஹிட் ஆகி வசூல் மழை பொழிந்தன. ஆனால் 2000 களுக்குப் பிறகு தமிழ் சினிமாவின் ட்ரண்ட் மாற அவரின் மெலோ டிராமா கதைகள் ரசிகர்களை திருப்திப்படுத்தவில்லை.
பூவே உனக்காக திரைப்படத்தின் சூப்பர் ஹிட்டுக்குப் பிறகு விஜய் மற்றும் விக்ரமன் இரண்டாவது முறையாக இணைந்த படம்தான் ‘உன்னை நினைத்து’. அந்த படத்தின் ஷூட்டிங் தொடங்கி சில நாட்களிலேயே விஜய் அந்தக் கதை தனக்குப் பிடிக்கவில்லை என சொல்ல விக்ரமன் அந்த படத்தில் இருந்து விலகிக் கொள்ள சொல்லிவிட்டார்.
அந்த பின்னர் சூர்யாவை வைத்து அந்த படத்தை இயக்கினார். அந்த படமும் சுமாரான வெற்றியைப் பெற்றது. ஆனால் அந்த படத்தின் நகைச்சுவைக் காட்சிகள் இன்றளவும் தொலைக்காட்சிகளில் ரசிகர்களால் ரசிக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் சமீபத்தில் ஒரு நேர்காணல் நிகழ்ச்சியில் பேசிய விக்ரமன் “என்னைப் பலரும் சூர்யவம்சம் பார்ட் 2 எடுக்க சொல்கிறார்கள். சௌத்ரி சார், சரத்குமார் சார் எல்லாரும் சொல்கின்றார்கள். ஆனால் எனக்கு என்னமோ அந்த பார்ட் 2 கலாச்சாரத்தில் உடன்பாடு இல்லை. அதுக்கு சரியான திரைக்கதை அமையவேண்டும்.
உன்னை நினைத்துப் படத்தை மட்டும் சந்தானத்தை வைத்து முழுக்க முழுக்க நகைச்சுவையாக எடுக்க வேண்டும் என்றொரு ஆசை இருக்கிறது. அந்த கோணத்தில் யோசித்து பாதித் திரைக்கதை எழுதியுள்ளேன்” எனக் கூறியுள்ளார்.
மும்பையின் லால்பாக் பகுதியில் அமைந்துள்ள கிளெனேகிள்ஸ் மருத்துவமனை, 15.59 மீட்டர் உயரத்தில் 'நம்பிக்கையின் உறுப்பு' என்ற பிரம்மாண்ட சிற்பத்தை திறந்து…
செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் பகுதியில் ஃபாஸ்ட் ஃபுட் கடை நடத்தி வந்த வீரா (எ) வீரமுத்துகிருஷ்ணன் (26) என்பவர்,…
திஷா சாலியன் வழக்கு தொடர்பாகத் தொடரப்படும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் குறித்து சிவ் சேனா தலைவர் ஆதித்யா தாக்கரே தனது மௌனத்தைக்…
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே கொல்லன்வயல் கிராமத்தைச் சேர்ந்த தங்கராசுவின் மகன் முருகன் (27). இவருக்கும் வைத்தியநாதன் வயல் கிராமத்தைச்…
கர்நாடக மாநிலம் சகலேஷ்பூர் தாலுகா, ஹெத்தூர் ஹோப்ளியில் உள்ள வலலஹள்ளி குடிஜே பகுதியில் ஸ்ரீதேவி லாட்ஜ் செயல்பட்டு வருகிறது. இந்த…
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவரின் மகள் ரேணுகா (25). இவருக்குத் திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ள…