கரூரில் சமீபத்தில் நடைபெற்ற தமிழக வெற்றி கழகம் பிரச்சார கூட்டத்தில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்த விவகாரம் தமிழக முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இதனிடையே முதல் கட்டமாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களான கட்சியின் பொதுச் செயலாளர் N. ஆனந்த், இணை பொதுச் செயலாளர் சி டி ஆர் நிர்மல் குமார், கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன் உள்ளிட்டோர் மீது ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் மதியழகன் மற்றும் பவுன்ராஜ் ஆகிய இருவரையும் கைது செய்துள்ள காவல் துறையினர் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திய நிலையில் 15 நாட்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது.
அதே சமயம் சமீபத்தில் தமிழக வெற்றி கழகம் தேர்தல் பிரச்சார பொதுச் செயலாளரான ஆதவ் அர்ஜுனா தன்னுடைய X தள பக்கத்தில், வன்முறையை தூண்டும் வகையில் ஒரு பதிவை பதிவிட்டு பிறகு அதனை நீக்கினார். இது தொடர்பாகவும் அவர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதனைத் தொடர்ந்து கரூர் துயர வழக்கில் தலைமறைவாக உள்ளார் N. ஆனந்த். இந்நிலையில் சென்னை மாவட்ட செயலாளர்கள் கூட்டம் அவர் இல்லாமல் நடைபெற்று உள்ளது. அத்துடன் விஜயின் சுற்றுப்பயண ரத்து அறிவிப்பும் ஆனந்த் கையெழுத்து விட்டால் லெட்டர் பேட் இல்லாமல், ட்வீட்டாகவே வெளியானது. ஆதவ் அர்ஜுனா டெல்லி பயணம், CTR நிர்மல் குமாரும் தலைமறைவு ஆகியவற்றால் உயர்மட்ட நிர்வாகிகள் இல்லாமல் தமிழக வெற்றி கழகம் தற்போது இயங்கி வருவதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயம் இன்று எழுதப்பட்டது. தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் சி. ஜோசப் விஜய்,…
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றவுடன் தனது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் அதிரடி நடவடிக்கைகளைத்…
பெங்களூருவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் கட்சி தனது அரசியல் ஆதாயத்திற்காகத் தனது கூட்டணிக் கட்சியான…
தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் பொறுப்பேற்றுள்ள முதல்வர் விஜய், தனது முதல் கோப்பிலேயே அதிரடி மற்றும் விவாதங்களுக்கு இடமளிக்கும்…
தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தமிழகத்தின் முதல்வராகப் பொறுப்பேற்றுள்ளார். அவருடன் இணைந்து…
தமிழக அரசியலில் புதிய அத்தியாயத்தைப் படைத்துள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், முதலமைச்சராகப் பொறுப்பேற்றவுடன் மாநிலத்தின் நிதி நிலை…