தமிழ் சினிமாவில் இன்றிருக்கும் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவர் விஜய். தன்னுடைய புகழின் உச்சியில் இருக்கும் விஜய் ரஜினிகாந்தை விட அதிக சம்பளம் வாங்கும் தமிழ் நடிகர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். அதற்கேற்றார் போல அவரின் சுமாரான படங்கள் கூட நல்ல வசூலைப் பெற்று வருகின்றன.
தற்போது மாஸ் நடிகராக இருக்கும் விஜய், 90 களில் தனக்கான இடத்துக்காக போராடிக் கொண்டிருந்தார். இடையிடையே ஹிட் கொடுத்திருந்தாலும் அவருக்கென்று ஒரு நிலையான மார்க்கெட் கில்லி படத்துக்கு முன்பே உருவானது. அதனால் அதற்கு முந்தைய படங்களில் எல்லாம் தன்னுடைய படத்தில் துறைசார்ந்த பிரபலங்கள் இருக்க வேண்டும், அது படத்தின் பிஸ்னஸுக்கு உதவும் என விரும்புவார்.
இப்படி விஜய்யை ஒரு விடலைப் பையனாகவும், சாக்லேட் பாய் ஹீரோவாகவும் அடுத்தடுத்த கட்டத்துக்கு நகர்த்தியவர் அவருடைய தந்தை SAC தான் என்று சொன்னால் அது மிகையாகாது. ஏனென்றால் விஜய்யை அறிமுகப்படுத்தி தொடர்ந்து சில படங்கள் அவரை ஹீரோவாக்கி தயாரித்து நஷ்டமடைந்தார். அதுமட்டுமில்லாமல் விஜய் ஹீரோவானதும் தன்னுடைய கேரியரை விட்டுவிட்டு அவரை முன்னணி ஹீரோவாக்க வேண்டும் என தொடர்ந்து உழைத்தார்.

#image_title
சுருக்கமாக சொன்னால் ரஜினிகாந்தின் வழியில்தான் விஜய் தொடர்ந்து 30 ஆண்டுகளாகப் பயணம் செய்து வருகிறார். சினிமாவில் மட்டும் இல்லாமல் அரசியலிலும் அவரின் வழியைதான் பின்பற்றி வருகிறார். ஒருபடி மேலே போய் அரசியல் கட்சியையும் ஆரம்பித்துவிட்டார்.
இந்நிலையில் விஜய்யின் ஆதர்சமாக இருந்த ரஜினியின் முரட்டுக் காளை திரைப்படத்தின் ரீமேக்கில் அவரை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்தது. அஜித் 2007 ஆம் ஆண்டு பில்லா படத்தை ரீமேக் செய்து நடித்து சூப்பர் ஹிட்டாக்கினார். அப்போது ரீமேக் ட்ரண்ட் தமிழ் சினிமாவில் பரவிய நிலையில் விஜய்யை வைத்து முரட்டுக்காளை திரைப்படத்தை ரீமேக் செய்ய பேச்சுவார்த்தை நடந்தது. ஆனால் அது அடுத்த கட்டம் நோக்கி நகரவில்லை. பின்னர் முரட்டுக் காளை சுந்தர் சி நடிப்பில் ரீமேக் ஆனது.
