விஜய் டிவியில் ஒளிபரப்பாக கூடிய அனைத்து சீரியல்களுக்குமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அதனைப் போலவே சமீப காலமாக இல்லத்தரசிகளை கடந்து இளம் ரசிகர்களையும் விஜய் டிவி சீரியல் வசீகரித்து வருகிறது.
இதன் காரணமாக சீரியல்களில் நடிக்கக்கூடிய பிரபலங்களுக்கும் அதிக அளவிலான ரசிகர்கள் கூட்டம் உள்ளது. அதன்படி விஜய் டிவி மற்றும் சன் டிவியில் ஹிட் சீரியல்களில் நடித்து பிரபலமான நடிகை மான்சி ஜோஷிக்கு தற்போது பிரம்மாண்டமாக திருமணம் நடந்து முடிந்துள்ளது.
விஜய் டிவியில் காதலிக்க நேரமில்லை என்ற சீரியல் மூலமாக பிரபலமான பிரஜின் நடித்த அன்புடன் குஷி சீரியலில் அவருக்கு ஜோடியாக மான்சி ஆரம்பத்தில் நடித்த நிலையில் அதன் பிறகு சில காரணங்களால் அந்த சீரியலில் இருந்து விலகினார். கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரை இந்த தொடர் ஒளிபரப்பானது. இந்த சீரியலை தொடர்ந்து சன் டிவியில் ஒளிபரப்பான மிஸ்டர் மனைவி சீரியலிலும் இவர் இரண்டாவது நாயகியாக நடித்திருந்தார்.
தமிழைத் தவிர்த்து கன்னட சீரியல்களில் அதிகம் கவனம் செலுத்தி வந்த இவருக்கு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்த நிலையில் அது தொடர்பான புகைப்படங்களையும் வெளியிட்டு அவர் அறிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து மான்சி தனது காதலர் ராகவ் என்பவரை கரம் பிடித்துள்ளார்.
இருவருக்கும் நேற்று பிரம்மாண்டமான முறையில் திருமணம் நடந்து முடிந்த நிலையில் அவர்களின் திருமண புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கர்நாடகாவில் பிறந்த மான்சி தன்னுடைய பள்ளிப்படிப்பை பெங்களூரில் தான் முடித்தார். கல்லூரி படிப்பை மங்களூரில் படித்த இவர் சிறுவயதில் இருந்தே நடிப்பின் மீது ஆர்வம் இருந்ததால் கல்லூரி படிப்பை முடித்த கையோடு சீரியல்களில் நடிக்க ஆர்வம் காட்டினார்.
சீரியல்களில் மட்டுமல்லாமல் மாடலிங் மற்றும் டிக் டாக் போன்ற செயலிகளிலும் ஆக்டிவாக இருந்த மான்சி தற்போது கன்னடம் மற்றும் தமிழ் சீரியல்களில் பிஸியாக நடித்து வருகின்றார். தற்போது திருமண வாழ்க்கையில் இணைந்துள்ள இவருக்கு ரசிகர்கள் பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
தற்கால டிஜிட்டல் உலகில் நீண்ட நேரம் அலைபேசி மற்றும் மடிக்கணினிகளைத் குனிந்து பார்ப்பதால் ஏற்படும் கழுத்து வலி, சாதாரணமான ஒன்றாகத்…
ஜோதிட சாஸ்திரப்படி வரும் மே 6, 2026 அன்று, புளூட்டோ கிரகம் (யமன்) தனது பாதையில் பின்னோக்கி நகரும் வக்ர…
தமிழகச் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான களம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இன்று 234 தொகுதிகளிலும் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தல்…
தமிழக சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்குத் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த 39 நாட்களாக…
தமிழகம் முழுவதும் இன்று சட்டமன்றத் தேர்தல் விறுவிறுப்பாகத் தொடங்கி நடைபெற்று வருகிறது. காலை 7 மணி முதல் மாலை 6…
தமிழகத்தில் இன்று சட்டசபை தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள பரச்சேரி கிராம…