விஜய் டிவியில் ஒளிபரப்பாக கூடிய அனைத்து சீரியல்களுக்குமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அதனைப் போலவே சமீப காலமாக இல்லத்தரசிகளை கடந்து இளம் ரசிகர்களையும் விஜய் டிவி சீரியல் வசீகரித்து வருகிறது.
இதன் காரணமாக சீரியல்களில் நடிக்கக்கூடிய பிரபலங்களுக்கும் அதிக அளவிலான ரசிகர்கள் கூட்டம் உள்ளது. அதன்படி விஜய் டிவி மற்றும் சன் டிவியில் ஹிட் சீரியல்களில் நடித்து பிரபலமான நடிகை மான்சி ஜோஷிக்கு தற்போது பிரம்மாண்டமாக திருமணம் நடந்து முடிந்துள்ளது.
விஜய் டிவியில் காதலிக்க நேரமில்லை என்ற சீரியல் மூலமாக பிரபலமான பிரஜின் நடித்த அன்புடன் குஷி சீரியலில் அவருக்கு ஜோடியாக மான்சி ஆரம்பத்தில் நடித்த நிலையில் அதன் பிறகு சில காரணங்களால் அந்த சீரியலில் இருந்து விலகினார். கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரை இந்த தொடர் ஒளிபரப்பானது. இந்த சீரியலை தொடர்ந்து சன் டிவியில் ஒளிபரப்பான மிஸ்டர் மனைவி சீரியலிலும் இவர் இரண்டாவது நாயகியாக நடித்திருந்தார்.
தமிழைத் தவிர்த்து கன்னட சீரியல்களில் அதிகம் கவனம் செலுத்தி வந்த இவருக்கு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்த நிலையில் அது தொடர்பான புகைப்படங்களையும் வெளியிட்டு அவர் அறிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து மான்சி தனது காதலர் ராகவ் என்பவரை கரம் பிடித்துள்ளார்.
இருவருக்கும் நேற்று பிரம்மாண்டமான முறையில் திருமணம் நடந்து முடிந்த நிலையில் அவர்களின் திருமண புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கர்நாடகாவில் பிறந்த மான்சி தன்னுடைய பள்ளிப்படிப்பை பெங்களூரில் தான் முடித்தார். கல்லூரி படிப்பை மங்களூரில் படித்த இவர் சிறுவயதில் இருந்தே நடிப்பின் மீது ஆர்வம் இருந்ததால் கல்லூரி படிப்பை முடித்த கையோடு சீரியல்களில் நடிக்க ஆர்வம் காட்டினார்.
சீரியல்களில் மட்டுமல்லாமல் மாடலிங் மற்றும் டிக் டாக் போன்ற செயலிகளிலும் ஆக்டிவாக இருந்த மான்சி தற்போது கன்னடம் மற்றும் தமிழ் சீரியல்களில் பிஸியாக நடித்து வருகின்றார். தற்போது திருமண வாழ்க்கையில் இணைந்துள்ள இவருக்கு ரசிகர்கள் பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
1500 பயிற்சி அலுவலர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது குறித்த செய்தி இடம் பெற்றுள்ளது. தகுதியுள்ள பட்டதாரிகள் இன்று முதல்…
பாரத ஸ்டேட் வங்கி கடந்த நிதியாண்டில் பேப்பர் மற்றும் பேனா உள்ளிட்ட ஸ்டேஷனரி பொருட்களுக்காக மட்டும் ரூ.986 கோடி செலவிட்டுள்ளதாகக்…
போன்பே-ஐ ஒரு வருடம் வரை பயன்படுத்தாமல் வைத்திருக்கும் பயனர்களுக்கு ரூ.100 அபராதம் விதிக்கப்பட உள்ளது. தொடர்ந்து 12 மாதங்கள் பயன்படுத்தப்படாத…
இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, நாடு முழுவதும் 1,500 பயிற்சி அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான…
முகேஷ் அம்பானி குடும்பம் முதல் பாலிவுட் நட்சத்திரங்கள் வரை அனைவரது வீட்டு விசேஷங்களிலும் தவறாமல் கலந்துகொள்ளும் பிரபலமாக ஓரி வலம்…
திமுகவிலிருந்து செந்தில் பாலாஜி விலகுகிறாரா என்ற கேள்வி எழுப்பப்பட்டு, இதனால் மு.க.ஸ்டாலின் அதிர்ச்சியடைந்துள்ளதாக ஒரு செய்தித் தொகுப்பு இடம் பெற்றுள்ளது.…