‘அதிமுகவை தொட்டால் நீ காலி”… வரி ஏய்ப்பு செய்யும் விஜய் ஊழலை பற்றி பேசலாமா?… பனையூர் பண்ணையாரை கிழித்து தொங்கவிட்ட ஜெயக்குமார்…..!

Spread the love

தமிழக அரசியலில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மற்றும் அதிமுக இடையே கருத்து மோதல் வலுத்து வருகிறது. சமீபத்தில் நடைபெற்ற கட்சியின் செயற்குழு கூட்டத்தில், அதிமுகவை ஊழல் சக்தி என்றும் பாஜகவின் அடிமை என்றும் விஜய் விமர்சித்திருந்தார். விஜய்யின் இந்த அதிரடி பேச்சு அதிமுக வட்டாரத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில், அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் விஜய்க்கு எதிராகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.

இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “அதிமுகவை தொட்டால் விஜய் கெட்டார்” என்று மிகக் காட்டமாக எச்சரித்துள்ளார். விஜய் வரி ஏய்ப்பு புகாரில் சிக்கியுள்ளதைச் சுட்டிக்காட்டிய அவர், பல கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்பவர்கள் ஊழலைப் பற்றிப் பேச எந்தத் தகுதியும் இல்லை என்று சாடினார். மேலும், சினிமா டிக்கெட்டுகளை சட்டவிரோதமாக கள்ளச் சந்தையில் விற்பனை செய்து லாபம் ஈட்டும் நபர்கள் ஊழல்வாதிகள் தான் என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

தமிழக வெற்றிக் கழகத்திற்கு ‘விசில்’ சின்னம் ஒதுக்கப்பட்டிருப்பது குறித்தும் ஜெயக்குமார் கிண்டலாகப் பேசினார். பொதுவாக ஆபத்தில் இருப்பவர்கள் தான் தங்களைக் காப்பாற்றிக் கொள்ள விசில் அடிப்பார்கள் என்று குறிப்பிட்ட அவர், விஜய் அரசியலில் தப்பிப் பிழைக்கப் போராடுவதையே இது காட்டுவதாகக் கூறினார். விஜய்யின் அரசியல் வருகை அதிமுகவுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என்றும், வரும் தேர்தலில் போட்டி என்பது அதிமுக மற்றும் திமுக இடையே தான் இருக்கும் என்றும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

மேலும், தன்னை முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆருடன் ஒப்பிட்டு விஜய் பேசுவதற்கும் ஜெயக்குமார் கடும் கண்டனம் தெரிவித்தார். எம்.ஜி.ஆர் விளம்பரத்திற்காகவோ அல்லது அரசியல் லாபத்திற்காகவோ உதவி செய்யவில்லை என்றும், அவர் சுயநலமற்ற மக்கள் தலைவர் என்றும் கூறினார். வரி ஏய்ப்பு வழக்குகளை எதிர்கொள்ளும் ஒரு நடிகர், புரட்சித் தலைவருடன் தன்னை ஒப்பிடுவது ஏற்புடையதல்ல என்றும், தனது வாழ்நாள் முழுவதும் அதிமுகவிலேயே நீடிக்கப் போவதாகவும் ஜெயக்குமார் உறுதியாகத் தெரிவித்துள்ளார்.

Nanthini

Recent Posts

FLASH NEWS: “அடுத்து பெரிய சம்பவம் இருக்கு”…. அன்புமணி உடன் அண்ணாமலை திடீர் சந்திப்பு….. சற்றுமுன் அரசியலில் புதிய புயல்….!

தமிழகத்தில் 'வி தி லீடர்ஸ்' என்ற புதிய இயக்கத்தைத் தொடங்கி தீவிரப் பணியாற்றி வரும் அண்ணாமலை, அதனை விரைவில் முழுமையான…

6 minutes ago

BREAKING: பதவி கிடையாது…. வானதி சீனிவாசன் திடீர் நீக்கம்…. பாஜக மேலிடம் போட்ட அதிரடி உத்தரவு…!

பாஜகவின் தேசிய மகளிரணித் தலைவர் பொறுப்பில் இருந்து கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினரான வானதி சீனிவாசன் விடுவிக்கப்பட்டுள்ளார். கடந்த 6…

10 minutes ago

சேலத்தை உலுக்கிய பயங்கரம்… 13 வயது சிறுமிக்கு மதுவை ஊற்றி கூட்டு பாலியல் வன்கொடுமை…. 2 சிறுவர்கள் செய்த அதிர்ச்சி செயல்…..!

சேலம் மாவட்டத்தில் 13 வயது சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், இரண்டு சிறுவர்கள் உட்பட 4 பேரை…

14 minutes ago

விவசாயிகள் ஷாக்… CM விஜய் அறிவித்த ரூ.75,000 கடன் தள்ளுபடி…. யாருக்கெல்லாம் முழுசா கிடைக்கும்?…. லிஸ்ட்டுல உடனே செக் பண்ணுங்க….!

விவசாயிகளின் நலனை முதன்மையாகக் கொண்டு, கூட்டுறவு வங்கிகளில் பெறப்பட்ட பயிர்க்கடன்களுக்கான தள்ளுபடி திட்டத்தை முதலமைச்சர் விஜய் அவர்கள் அறிவித்துள்ளார். இத்திட்டத்தின்படி,…

24 minutes ago

BREAKING: அண்ணாமலைக்குப் பின் டெல்லியில் ஒலிக்கும் தமிழரின் குரல்…. தேசிய பாஜகவில் களமிறங்கிய ம.வெங்கடேசன்…. நிதின் நபின் அறிவிப்பு….!

பாஜகவின் அமைப்பு ரீதியான மாற்றங்களைத் தொடர்ந்து புதிய நியமனங்களை அக்கட்சியின் தேசியத் தலைவர் நிதின் நபின் அறிவித்துள்ள நிலையில், தமிழ்நாட்டைச்…

30 minutes ago

பயங்கர சத்தம்..! சுக்குநூறான கட்டடம்..! 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் அலறல்… நொடியில் நடந்த கோர விபத்து… பதறவைக்கும் வீடியோ…!!

பால்கர் மாவட்டத்தின் போய்சார் பகுதியில் உள்ள தாராபூர் தொழிற்பேட்டையில் இயங்கி வரும் 'விராஜ் ப்ரொஃபைல்ஸ்' எஃகு உற்பத்தி ஆலையில் திங்கள்கிழமை…

46 minutes ago