பாஜகவின் தேசிய மகளிரணித் தலைவர் பொறுப்பில் இருந்து கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினரான வானதி சீனிவாசன் விடுவிக்கப்பட்டுள்ளார். கடந்த 6 ஆண்டுகளாக பா.ஜ.க.வின் தேசிய மகளிரணித் தலைவராகச் சிறப்பாகப் பணியாற்றி வந்த இவருக்குப் பதிலாக, சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த ரூப் குமாரி செளத்ரி புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். கோயம்புத்தூர் மாவட்டம் தொண்டாமுத்தூர் அருகே உள்ள உளியம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த வானதி சீனிவாசன், வழக்கறிஞராகவும் சமூக ஆர்வலராகவும் தனது பயணத்தைத் தொடங்கியவர் ஆவார்.
சமூக சேவையில் மிகுந்த ஈடுபாடு கொண்ட இவர், கோவை மக்கள் சேவை மையம், தாமரை சக்தி மற்றும் புதிய இந்தியா மன்றம் போன்ற அமைப்புகளை நிறுவி பல்வேறு நலத்திட்டங்களை முன்னெடுத்து வந்துள்ளார். கோவைத் தெற்குத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராகப் மக்கள் பணியாற்றி வரும் வானதி சீனிவாசன், தேசிய அளவில் கட்சியின் மகளிரணியை வழிநடத்திய அனுபவத்தோடு தொடர்ந்து தனது மக்கள் மற்றும் அரசியல் பணிகளை ஆற்றி வருகிறார்.
உத்தரப் பிரதேசத்தின் கோண்டா மாவட்டத்தில் உள்ள ‘நாலெட்ஜ் பீம் அகாடமி’ பள்ளியில், சுதந்திர தின விழாவின் போது புர்கா மற்றும்…
தமிழக சட்டசபைக் கூட்டத் தொடர் பரபரப்புகளுக்கும் விறுவிறுப்புகளுக்கும் பஞ்சமில்லாமல் நடைபெற்று வருகிறது. 2026 சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்று தமிழக…
உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த 17 வயது சிறுவன் ஒருவன், ராபிடோ பைக் டாக்ஸியில் பயணித்தபோது, அந்த ஓட்டுநர் அவரிடம் பாலியல் ரீதியாக…
மகாராஷ்டிராவின் லாத்தூர் மாவட்டம் உத்கிர் பகுதியில், மாந்திரீகம் மற்றும் மூடநம்பிக்கையின் பெயரில் 15 வயது சிறுமிக்கு இழைக்கப்படவிருந்த பயங்கரம் நல்வேளையாகத்…
சட்டமன்றத்தில் உறுப்பினர்களின் நடவடிக்கைகள் மற்றும் மரியாதை நிமித்தமான பழக்கவழக்கங்கள் குறித்த விவாதங்கள் அவ்வப்போது எழுவது இயல்பான ஒன்று. சமீபத்தில் தமிழகச்…
தமிழகத்தில் 'வி தி லீடர்ஸ்' என்ற புதிய இயக்கத்தைத் தொடங்கி தீவிரப் பணியாற்றி வரும் அண்ணாமலை, அதனை விரைவில் முழுமையான…