தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் அடுத்த வருடம் நடைபெற உள்ளது. இதற்காக கட்சிகளில் கூட்டணி அமைப்பது, வாக்காளர்களை கவரும் விதமாக பிரச்சாரத்தில் ஈடுபடுவது உள்ளிட்ட அரசியல் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். இதில் திமுக சார்பாக ஓரணியில் தமிழ்நாடு என்ற முழக்கத்தோடு மக்களை நேரடியாக சந்தித்து பிரச்சாரம் மேற்கொள்கிறார்கள் .அதிமுக சார்பாக மக்களை காப்போம் தமிழகத்தின் மீட்போம் என்ற முழக்கத்தோடு அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தொகுதி வாரியாக மக்களை சந்தித்து வருகிறார்.
இதற்கிடையில் TVK தலைவர் விஜய் தன்னுடைய பரப்புரையில் பாஜகவையும், திமுகவையும் கடுமையாக விமர்சித்து வருகிறார். சட்டசபை தேர்தலில் திமுகவிற்கும் TVKவிற்கும் தான் போட்டி என்று கூறுவதோடு முதல்வர் ஸ்டாலினையும் கடுமையாக விமர்சித்து வருகிறார். திமுக அரசின் தவறான செயல்பாடுகளையும், அவர்கள் செய்ய தவறியவற்றையும் விமர்சிக்கும் அவர், தன்னுடைய பரப்புரையின்போது அந்தந்த மாவட்ட அமைச்சர்களை தாக்குவதையும் நிறுத்தவில்லை. மதுரை மாநாட்டில் மூர்த்தி, திருச்சியில், நேரு, அன்பில், அரியலூரில் சிவசங்கர், நேற்று டிஆர்பி ராஜா பெயரை குறிப்பிட்டு விஜய் அட்டாக் செய்துள்ளார்.
