நடிகர் KPY பாலா காந்தி கண்ணாடி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படம் வருகிற ஐந்தாம் தேதி ரிலீஸ் ஆகிறது. படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் நடிகர் விஜய் சேதுபதி பங்கேற்ற பட குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் கூறும் போது, நான் பாலா கிட்ட அடிக்கடி சொல்லிட்டே இருப்பேன். நிறைய பேருக்கு தானம் தர்மம் பண்றவன் கையில் எப்போதும் காசு இருக்கணும்.
எல்லாத்தையும் கொடுத்தாலும் உனக்குன்னு கொஞ்சம் வச்சிக்கடான்னு சொல்லுவேன். நிறைய பேருக்கு உதவி பண்றவங்க கீழே விழுந்தா உதவி பண்ணனும்னு நினைக்கிறவங்களுக்கு பயம் வந்துரும். அந்த பயத்தை ஏற்படாமல் பார்த்துக்க என விஜய் சேதுபதி கூறியுள்ளார். அவரது அறிவுரைக்கு பலரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
அடிமட்டத்திலிருந்து பல தடைகளை தாண்டி பெரிய திரையில் தனது பயணத்தை பாலா ஆரம்பித்துள்ளார். இதுவரை அவர் 5 ஆம்புலன்ஸ் வாகனங்களை வாங்கி கொடுத்துள்ளார். நிறைய பேருக்கு தொழில் தொடங்க உதவி செய்துள்ளார். சென்னை பல்லாவரத்தில் ஒரு மருத்துவமனை கட்டி வருகிறார். அந்த மருத்துவமனை மூலம் ஏழை மக்களுக்கு சிகிச்சை அளிக்கப்படும் என கூறியுள்ளார்.
