தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக ஜொலித்துக் கொண்டிருக்கும் விஜய் கடைசியாக கோட் படத்தில் நடித்து முடித்த நிலையில் தளபதி 69 படத்தில் மட்டும் அடுத்து நடித்து விட்டு அதன்பிறகு சினிமாவிலிருந்து விலகி முழு நேர அரசியலில் ஈடுபட உள்ளார். இதனால் ரசிகர்கள் கவலையுடன் இருந்தாலும் மறுபுறம் அரசியலில் இறங்கியுள்ளதால் சந்தோஷத்தில் இருக்கிறார்கள் என்றே சொல்லலாம். இன்று தளபதி என விஜய் போற்றப்பட்டாலும், பலருக்கும் பிடித்தது இளைய தளபதி விஜய் தான்.
ஆரம்ப காலத்தில் குடும்ப படங்களாக நடித்து மக்களின் மனதில் இடம்பிடித்தார் விஜய். அண்ணனாக, மகனாக, காதலனாக நடித்த விஜயை நிச்சயம் யாராலும் மறக்க முடியாது. இனிமேல் அப்படி ஒரு விஜய் படத்தை யாரும் பார்க்க முடியாது. செல்வ பாரதி இயக்கத்தில் விஜய், சிம்ரன் நடித்த படம் வசீகரா. இந்த விஜய் முற்றிலும் வித்தியாசமாக இருப்பார். ஹேர்ஸ்டைல், கண்ணாடி என ஆளே வித்தியாசமாக இருக்கும் விஜய் இன்றும் ரசிகர்கள் மனதில் பூபதியாக வாழ்கிறார்.
இந்த விஜய்யை மறுபடியும் பார்க்க முடியாத என ஏங்கும் ரசிகர்கள் தான் ஏராளம். இந்நிலையில் இந்த படப்பிடிப்பு தலத்தில் நடந்த விஷயங்கள் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதாவது,வசீகரா படத்தில் ஷூட்டிங் டைமில் விஜய் மற்றும் தினேஷ் மாஸ்டரும் பேய் மாதிரி பெட்ஷீட் எல்லாம் போட்டுட்டு போய் அந்த படத்தினுடைய டைரக்டர் மற்றும் சினேகா ரூம் கதவையும் தட்டிவிட்டு ஓடி போயிருக்காங்க.
இதனால் பயத்துல அவங்க இரண்டு பேரும் வந்து என்ன பண்றது என்று தெரியாமல் இருந்திருக்காங்க. அடுத்த நாள் காலையில் டைரக்டரும் சினேகாவும் இந்த விஷயம் குறித்து பேசிட்டு இருந்திருக்காங்க. அந்த டைம்ல விஜயும், தினேஷ் சிரிச்சே மாட்டிக்கிட்டாங்களாம்.