கரூரில் கடந்த சனிக்கிழமை நடந்த தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜயின் பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். பலரும் படுகாயம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையே ஏற்படுத்தியுள்ளது. இதில் யார் மீது குற்றம் என்பது குறித்த விவாதம் தற்போது நடைபெற்று வருகிறது. விஜய்யை தொடர்ந்து பலரும் விமர்சித்து வருகிறார்கள். இருந்தாலும் அவர் மீது குற்றமில்லை என்று பலரும் ஆதரவாக குரல் கொடுத்து வருகிறார்கள்.
சமூக வலைத்தளங்களில் இந்த சம்பவம் தொடர்பாக பொய்யான செய்தி பரப்புவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில் தீவிர விஜய் ரசிகரான சிறுவன் ஒருவன் விஜய்க்கு ஆதரவு என்ற பெயரில் தமிழக காவல்துறைக்கு விரட்டல் விடுத்து பேஸ்புக்கில் வெளியிட்ட வீடியோ பரபரப்பை கிளப்பியுள்ளது. அந்த வீடியோவில் பேசும் சிறுவர், விஜய் அண்ணாவ தொட்டுப் பாருங்க, தமிழ்நாடே பாதிக்கும். போலீஸ் ஸ்டேஷனே பிளாஸ்ட் ஆகிடும்.
விஜய் அண்ணா வீட்டுக்குள்ள இறங்கி பாருங்க தமிழ்நாடு பிளாஸ்ட், ஒண்ணுமே பண்ண முடியாது. தொட்டு மட்டும் பாருங்க போலீஸ் ஸ்டேஷன் இருக்காது. எல்லா ரசிகர்களும் அலற உற்றுவோம். ஒண்ணுமே பண்ண முடியாது. பஸ் எல்லாம் எரியும் என்று சிறுவன் மிரட்டல் விடுத்துள்ளார். பிறகு தான் பேசிய விஷயத்தின் தீவிரத்தை உணர்ந்த சிறுவன் அதற்கு மன்னிப்பு கேட்டும் பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார். Sorry இனிமே என்னுடைய ஐடியில் வீடியோ வராது, இனிமேல் நான் வீடியோ பதிவிட மாட்டேன், தவறாக வீடியோ போட்டதற்கு மன்னித்து விடுங்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.
