குடிமகன்களுக்கு ஷாக்… தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் மூடல்… அரசு அதிரடி அறிவிப்பு…!

By Nanthini on புரட்டாதி 30, 2025

Spread the love

தமிழகத்தில் பொதுவாகவே முக்கிய தலைவர் பிறந்தநாள் கொண்டாடப்படும் போது மது கடைகள் மூடப்படுவது வழக்கம். அதன்படி வருகின்ற அக்டோபர் இரண்டாம் தேதி காந்தி ஜெயந்தியை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள அனைத்து மது கடைகளும் மூடப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் அதனை சார்ந்த பார்கள், FL 2 உரிமம் கொண்ட கிளப்புகளை பார்கள், ஹோட்டல்களை சார்ந்த பார்கள் மற்றும் மதுபான கூடங்கள் என அனைத்தும் கண்டிப்பாக மூடப்பட வேண்டும். அரசு உத்தரவை மீறி மதுபான விற்பனை செய்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.