தமிழகத்தின் சட்டம் – ஒழுங்கு டிஜிபியாக வெங்கடராமன் நியமிக்கப்பட்டுள்ளார். டிஜிபி சங்கர் ஜிவால் பணி ஓய்வு பெற்ற நிலையில் அவருக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. நாகையை சேர்ந்த வெங்கடராமன், 1994 ஆம் ஆண்டு ஐபிஎஸ் ஆக தேர்வானவர். பல மாவட்டங்களில் SP ஆக பணியாற்றியதோடு முக்கியத்துவம் வாய்ந்த CBCID தலைமையிடம் மற்றும் நிர்வாக பிரிவுகளில் பணியாற்றி அரசின் பாராட்டை பெற்றவர்.
