தற்போது நாடு முழுவதும் மின்சார வாகனங்களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. அந்தவகையில் தமிழகத்திலும் பெரும்பாலான மக்கள் மின்சார வாகனத்தை பயன்படுத்தி வருகிறார்கள். இந்நிலையில் இவர்களுக்கு மகிழ்ச்சியூட்டும் விதமாக சென்னையில் மின்சார வாகனங்களுக்கு சார்ஜிங் நிலையம் அமைக்க ஒன்பது இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து 2 வாரத்தில் டெண்டர் கோரப்பட்டு விரைவில் சார்ஜிங் நிலையங்கள் அமைக்கும் பணிகள் தொடங்கப்படும் என மாநகராட்சி தெரிவித்துள்ளது.
தேர்வு செய்யப்பட்டுள்ள இடங்கள்: 1) பெசன்ட் நகர், அஷ்டலட்சுமி கோயில் பார்க்கிங் 2) பெசன்ட் நகர் கடற்கரை பார்க்கிங் 3) அம்பத்தூர், மங்கல் ஏரி பார்க்கிங் 4) தியாகராயர் நகர், மாநகராட்சி மைதானம் பார்க்கிங் 5) தியாகராயர் நகர், சோமசுந்தரம் மைதானம் 6) செம்மொழிப் பூங்கா, ஆயிரம் விளக்கு 7) மெரினா கடற்கரை பார்க்கிங் 8) அண்ணாநகர், போகன் வில்லா பூங்கா 9) மயிலாப்பூர், நகேஸ்வரா ராவ் பூங்கா
