கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தை சேர்ந்த அப்துல் லத்தீப் என்பவர் துபாயில் பணியாற்றி வரும் நிலையில் தனது மனைவி மற்றும் ஐந்து குழந்தைகளுடன் அங்கு ஒன்றாக வசித்து வந்துள்ளார். இதனிடையே ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறையை கழிப்பதற்காக அப்துல் தனது குடும்பத்தினரோடு சேர்ந்து அபுதாபி சென்றுள்ளார். அதன்பிறகு அங்கிருந்து திரும்பும்போது அவர்கள் பயணம் செய்த கார் திடீரென பயங்கர விபத்துக்குள்ளானது.
இந்த கோர விபத்தில் அப்துலின் ஆண் குழந்தைகள் அசாஷ் (14), அம்மார் (12), அசாம் (7), அயாஸ் (5) ஆகிய நான்கு பேரும் அவர்களுடன் பயணித்த வீட்டு பணியாளர் புஷ்ரா (49) என்ற கேரள பெண்ணும் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் அப்துல், அவருடைய மனைவி மற்றும் அவர்களுடைய பெண் குழந்தை ஆகிய மூவரும் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. இந்த சம்பவம் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
தமிழ்நாட்டு அரசியலில் தற்போது ஏற்பட்டுள்ள புதிய கூட்டணிக் கணக்குகளும், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) வரவும் பாட்டாளி மக்கள் கட்சியை…
சமூக வலைதளங்களில் அவ்வப்போது மாணவர்களின் வினோதமான விடைத்தாள்கள் வைரலாவது வழக்கம். அந்த வகையில், தற்போது ஒரு மாணவனின் கணிதத் தேர்வு…
உத்தரகண்ட் மாநிலம் முசோரிக்குச் சென்ற சுற்றுலாப் பயணிகள் காரில் இருந்து பிளாஸ்டிக் கழிவுகளை சாலையில் வீசியதை, அனூப் நௌடியல் என்ற…
ஜெய்ப்பூரில் வசித்து வந்த பொதுப்பணித்துறை பொறியாளர் ஒருவர், தனது வீட்டில் வைத்து மனைவியைத் தாக்கியுள்ளார். அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில்,…
உத்தரப் பிரதேச மாநிலம் ஷாஜஹான்பூர் மாவட்டத்தில் உள்ள கிராமம் ஒன்றில், 11 வயது சிறுமி ஒருத்தி தெருநாய்கள் கடித்துக் குதறியதால்…
அதிமுகவில் கடந்த சில நாட்களாக நிலவி வந்த உட்கட்சி பூசல் தற்போது ஒரு முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது. தமிழக வெற்றிக்…