நாடு முழுவதும் முக்கிய வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றது. தமிழகத்திலும் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன. ஏசி வசதி, பயோ டாய்லெட், தானியங்கி கதவுகள் உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்களுடன் அதிநவீன சொகுசு வசதிகள் கொண்ட இந்த ரயில்களுக்கு பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. தற்போது இந்த ரயில்களில் இருக்கை வசதி மட்டுமே உள்ள நிலையில் படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்களை இயக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்தனர்.
அந்த கோரிக்கையை ஏற்று ஸ்லீப்பர் ரயில்களை தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வந்த நிலையில் சமீபத்தில் சோதனை ஓட்டமும் மேற்கொள்ளப்பட்டது. இந்த ரயில் எந்த வழித்தடத்தில் முதலில் இயக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு நிலவிய நிலையில் தற்போது இது குறித்து அறிவிப்பை ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் வெளியிட்டுள்ளார். அதன்படி வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் கொல்கத்தா – கவுகாத்தி இடையே இயக்கப்பட உள்ளது.
வருகின்ற ஜனவரி 18ஆம் தேதி அல்லது 19 ஆகிய தேதிகளில் இந்த ரயில் சேவையை பிரதமர் மோடி தொடங்க வைக்க உள்ளதாகவும் ஓரிரு நாட்களில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் கட்டணத்தை பொறுத்தவரையில் மூன்றாம் வகுப்பு ஏசி பெட்டிக்கு 2300 ஆகவும் முதல் வகுப்புக்கு 3600 ஆகவும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்திய இரயில்வேயில் உறுதி செய்யப்பட்ட 2AC டிக்கெட் வைத்திருந்த ஒரு பெண் பயணி, தனது போர்டிங் பாயிண்டில் ஏறாததற்காக ₹2,650…
ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரைச் சேர்ந்த இரண்டு சுற்றுலாப் பயணிகள், இந்தியாவின் கேரளா மாநிலம் கொச்சியிலிருந்து ராஜஸ்தானின் ஜெய்சல்மேர் வரை சுமார்…
"இதற்கு மேல் நான் என்ன கேட்க முடியும்? என் மகன் என் கனவை நனவாக்கியுள்ளான். அவன் 1974-ல் பிறந்தபோது, உணவிற்கே…
பரேலியில் உள்ள ரிக்கி சிங் பெண்கள் இன்டர் கல்லூரியில் நடந்த இந்தச் சம்பவம், கல்வியறிவு பெற்ற ஒரு சமூகத்தில் இன்றும்…
உத்தரப்பிரதேச மாநிலம் பதேபூரில், சட்டப்படிப்பு (LLB) பயின்று வந்த ராஜ்பால் என்ற மாணவன், சந்தேகத்தின் பேரில் தனது காதலியையே கொலை…
தமிழக முதல்வராக நடிகர் விஜய் பதவியேற்றுக்கொண்ட வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வில், திமுக முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகள் கயல்விழி…