சென்னை மாநகரில் மிக முக்கிய இடங்கள் பல இருந்தாலும் வண்டலூரில் அமைந்துள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவுக்கென்று மக்களின் மனதில் ஒரு தனி இடம் உண்டு. ஆனால் இந்த உயிரியல் பூங்கா தொடக்க காலகட்டத்தில் வண்டலூரில் தொடங்கப்படவே இல்லை. அது வண்டலூருக்கு இடமாற்றப்பட்டது என்பதே உண்மை.
1854 ஆம் ஆண்டு முதன்முதலில் எக்மோர் பகுதியில் அமைந்திருந்த அருங்காட்சியகத்தில்தான் இந்த உயிரியல் பூங்கா தொடங்கப்பட்டது. அப்போது ஒரு சிறுத்தையும் ஒரு புலியும் மட்டுமே இருந்தது. அதன் பின் சென்னை மத்திய அருங்காட்சியகத்தின் இயக்குனரான எட்வர்ட் கிரீன், அப்போதிருந்த கர்நாடக பகுதியின் நவாப்பிடம் இருந்து பல விலங்குகளை சேகரித்தார்.
அதன் பின் பாலூட்டிகள், பறவைகள் உட்பட 300க்கும் அதிகமான விலங்குகள் காட்சிப்படுத்தப்பட்டன. அதனை தொடர்ந்து 1861 ஆம் ஆண்டு சென்னை மத்திய தொடருந்து நிலையத்திற்கு அருகில் அமைந்துள்ள மக்கள் பூங்காவிற்கு இந்த உயிரியல் பூங்கா மாற்றலானது.
அதனை தொடர்ந்து பல வருடங்கள் மக்கள் பூங்காவில் உயிரியல் பூங்கா இயங்கி வந்த நிலையில் சுதந்திரம் கிடைத்தப் பிறகு மெட்ராஸ் மாநகரம் விரிவடையத்தொடங்கியது. வாகனங்கள் அதிகரித்ததால் காற்று மாசு அதிகரித்து விலங்குகளின் நலனுக்கு கேடு விளையத் தொடங்கியது. மேலும் பூங்காவிற்கு போதுமான இடவசதியும் கிடைக்கவில்லை.
ஆதலால் 1976 ஆம் ஆண்டு தமிழக வனத்துறை, நகர் பகுதிக்கு கொஞ்சம் வெளியே இருந்த வண்டலூர் வனப்பகுதியில் 1265 ஏக்கர் நிலத்தை ஒதுக்கியது. 1979 ஆம் ஆண்டு உயிரியல் பூங்காவிற்கான பணிகள் தொடங்கப்பட்டு உயிரினங்கள் அனைத்தும் இடமாற்றப்பட்டன. அதன் பின் 1985 ஆம் ஆண்டு மக்களுக்காக வண்டலூர் உயிரியல் பூங்கா திறந்தவிடப்பட்டது. இவ்வாறு முதலில் எக்மோர் பகுதியில் தொடங்கப்பட்ட உயிரியல் பூங்கா அதன்பின் வண்டலூர் பகுதிக்கு மாற்றப்பட்டு தற்போது இயங்கி வருகிறது.
ராமநாதபுரத்தில் இருந்து பரமக்குடிக்கு நீட் தேர்வு எழுதச் சென்ற மாணவர் ஒருவர், தனது நுழைவுச் சீட்டை (Hall Ticket) அரசுப்…
டெல்லி கர்கர்தூமா நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றி வந்த அமன்குமார் சர்மா (30), தனது வீட்டின் கழிவறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட…
இந்தியாவின் கல்வி மையமான கோட்டாவில், போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்வதைத் தடுக்க விடுதி அறைகளில் உள்ள மின்விசிறிகள்…
சென்னையில் பாதுகாப்புப் பணியாளராகப் பணிபுரியும் பிங்கி நந்தி என்பவர், கடந்த ஐந்து ஆண்டுகளில் தனது வருமானம் எவ்வாறு உயர்ந்தது என்பது…
மகாராஷ்டிர மாநிலம் புனேவில் 65 வயது முதியவர் ஒருவர் 4 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்து, கல்லைத் தலையில்…
திரையுலகில் கிளாமர் மற்றும் குணச்சித்திர வேடங்களில் புகழ்பெற்ற நடிகை சோனா, சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகர் வடிவேலுவை கடுமையாகச் சாடிப்…