இது எப்படி சாத்தியம்?.. அஜித்துக்காக வாலி எழுதிய பாடல்.. ஷாக்காகி நின்ற பிரபல இயக்குனர்..!!

By Mahalakshmi

Published on:

சினிமாவில் பல பிரபலங்கள் பின்னால் நடக்கப் போவதை முன்கூட்டியே அறிந்திருப்பார்கள். அதாவது இந்த படத்தின் கதை இப்படித்தான் இருக்கும் இதற்கு ஏற்றவாறு தான் நாம் பாடல் அமைக்க வேண்டும் என்று நினைத்து வைத்திருப்பார்கள். எடுத்துக்காட்டாக நம் வைரமுத்து மற்றும் இசைஞானி இளையராஜாவை கூறலாம். இவர்களுக்கு இடையே ஆன புரிதல் என்பது பல திரைப்படங்களில் தெரிந்திருக்கும்.

   

வைரமுத்து மீது இருக்கும் நம்பிக்கை காரணமாக பாடல் வரிகளை கூட சரியாக படிக்காமல் கம்போசிங் செய்வாராம் இளையராஜா.அந்த வரிகளும் படத்திற்கு ஏற்றார் போல் சரியாக அமைந்து விடுமாம். இது பல நேரங்களில் நடந்திருப்பதாக பல பிரபலங்கள் தெரிவித்திருக்கிறார்கள். அப்படி ஒரு சம்பவம் தான் ஏ.ஆர்.முருகதாஸ் படத்திலும் நடந்திருக்கின்றது.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் அஜித் நடிப்பில் உருவான திரைப்படம் தீனா. இந்த திரைப்படத்தில் உள்ள வத்திக்குச்சி பத்திக்காதுடா என்ற பாடலை கவிஞர் வாலி எழுதியிருந்தார். முதலில் பாடல் வரிகளை கேட்ட முருகதாஸ் எதுவும் பேசாமல் அப்படியே அமர்ந்து விட்டாராம். இதை பார்த்த வாலி இதுனால்தான் புது இயக்குனர்களுடன் நான் பாடல் எழுதுவதே கிடையாது.

புடிச்சிருக்கு பிடிக்கலன்னு ஏதாவது சொன்னா தானே ஆச்சு என்று சட்டு என்று பேசி விட்டாராம். உடனே ஏ ஆர் முருகதாஸ் இந்த பாட்டை எடுக்கும் போது அஜித் சார் வாயில் தீக்குச்சியை வைத்திருப்பது போல் நான் யோசித்து வைத்திருந்தேன். அதற்கு ஏற்றார் போல் பாடல் வரிகள் அமைந்திருப்பதை பார்த்து நான் ஆச்சரியத்துடன் அமர்ந்திருந்தேன் என்று கூறினாராம்.

author avatar
Mahalakshmi