Categories: சினிமா

புஷ்பா புருஷன் மாதிரி தான் விக்னேஷ் சிவனும்.. எங்க கிட்ட நிறைய சீக்ரெட் இருக்கு.. வலைப்பேச்சு பிஸ்மி போட்டுடைத்த உண்மை..!

Spread the love

தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் ஆக வலம் வந்து கொண்டிருக்கும் நயன்தாராவின் ஆவணப்படம் சமீபத்தில் வெளியாகி இருந்தது. இந்த படத்தில் நயன்தாராவின் முதல் படம் முதல் கடைசி படம் வரை அனைத்து காட்சிகளும் சேர்க்கப்பட்டிருந்தன. அதன்படி விக்னேஷ் சிவனுக்கும் நயன்தாராவுக்கும் காதல் மலர்ந்த நானும் ரவுடிதான் திரைப்படத்தின் சில காட்சிகளை இப்படத்தில் இணைத்திருந்தனர். ஆனால் இப்படத்தின் தயாரிப்பாளர் தனது உரிமை இல்லாமல் எப்படி படத்தின் காட்சிகளை நீங்கள் இணைக்க முடியும் என்று கூறி வழக்கு தொடர்ந்திருந்தார். இப்படியான நிலையில் தனுசுக்கு எதிராக நடிகை நயன்தாரா அறிக்கை வெளியிட்டார். இந்த விவகாரம் சூடு பிடிக்க தொடங்கிய நிலையில் நயன்தாரா செய்தது தான் தவறு என்று தனுஷ் மீது தவறு இல்லை என வலைப்பேச்சு அந்தணன் மற்றும் பிஸ்மி ஆகியோர் பேசியதால் நடிகை நயன்தாராவுக்கு அவர்கள் மீது கோபம் ஏற்பட்டுள்ளதாக கூறுகின்றனர்.

இதனைத் தொடர்ந்து கெட்டதை பார், கெட்டதை கேள், கெட்டதை மட்டுமே பேசு என்று சொல்லும் மூன்று மோசமான குரங்குகள் சினிமா கிசுகிசுக்களை பற்றி பேசியே வயிற்றை வளர்த்து வருகிறார்கள் என்று நயன்தாரா வலைப்பேச்சு டீமில் உள்ள அந்தணன், மிஸ்மி மற்றும் சக்திவேல் உள்ளிட்ட மூவரையும் நேரடியாக விமர்சித்திருந்தார். இதனை தொடர்ந்து இந்த விமர்சனங்களுக்கு வலைப்பேச்சு பிஸ்மி பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் பிரபல யூட்யூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், நயன்தாரா பற்றி நாங்கள் அவ்வளவு அதிகமாக வீடியோ போட்டது கிடையாது. தனுஷ் விவகாரம் வந்த பிறகு தான் ஒரு சில நெகட்டிவ்வான வீடியோக்களை போட்டோம். இருந்தாலும் அது எல்லாமே உண்மைதான்.

நயன்தாரா எங்களை மூன்று குரங்குகள் என்று தாக்க காரணம் நயன்தாரா பற்றி நிறைய மறைக்கப்பட்ட உண்மைகள் எங்களுக்கு தெரியும் என்பதால்தான். ஒருவேளை அந்த சம்பவங்களை நாங்கள் வெளியில் கூறி விடுவோம் என்ற பயத்தில் தான் அவர் அப்படி பேசியுள்ளார். நயன்தாராவின் கணவர் என்பதுதான் விக்னேஷ் சிவனுக்கு அடையாளம். ஒரு படத்தில் புஷ்பாவின் கணவர் என்று சொல்வது போல நயன்தாராவின் கணவர் என்று சொல்வது தான் அவருக்கு அடையாளமாக உள்ளது. நயன்தாரா சம்பாதித்த நிறைய படங்களை தற்போது பல பிசினஸ்களில் முதலீடு செய்து வருகிறார்கள். இது ஒரு வகையில் நல்லது தான். கடைசி வரைக்கும் சினிமா சோறு போடும் என்று சொல்ல முடியாது.

ஆனால் சமீபத்தில் பாண்டிச்சேரியில் ஒரு அரசு ஓட்டலை விக்னேஷ் சிவன் வாங்குவதாக தகவல் வெளியாகி இருந்தது. இது ஒரு தவறான செயல்தான். அரசு சொத்தை வாங்க நினைப்பது மிகப் பெரிய முட்டாள்தனம். இதைத் தெரிந்தும் ஏன் அவர் செய்கிறார் என தெரியவில்லை. பணம் இருக்கவங்க எல்லாம் அறிவாளியாக முடியாது, அறிவாளி கையில எல்லாம் பணம் இருக்காது என்று ஒரு பழமொழி உள்ளது. குறுக்கு வழியில் சென்று அரசு சொத்தை வாங்க நினைப்பது மிகப்பெரிய தவறு என்று விக்னேஷ் சிவனை பிஸ்மி விமர்சித்துள்ளார்.

Nanthini

Recent Posts

பிறந்தநாள் கொண்டாட வந்த இடத்தில்… மருமகனுக்கு மதுவில் விஷம் கலந்த மாமனார்.., 4 மாதங்களுக்குப் பின் அம்பலமான பகீர் உண்மை..!!

உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில், தனது மகளின் பிறந்தநாளைக் கொண்டாட வந்த மருமகனுக்கு, மாமனாரே விஷம் வைத்துக் கொலை செய்துள்ள…

4 minutes ago

“தோனியின் சாதனையை முறியடிப்பதே என் லட்சியம்… 5 கோப்பைகள் தான் டார்கெட்!”… ஐபிஎல் களத்தில் அதிரடி கிளப்பும் கே.எல். ராகுல்…!!!

2026 ஐ.பி.எல். சீசனில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்காக விளையாடி வரும் கே.எல். ராகுல், ஐ.பி.எல். வரலாற்றில் அதிக ரன்கள் குவித்தவர்கள்…

9 minutes ago

என்னடா இது..? 5.3 லிட்டர் டேங்கில் 6 லிட்டர் பெட்ரோலா..? பெட்ரோல் பங்கில் அம்பலமான பகீர் மோசடி… ஊழியரை ஓட ஓட விட்ட இளம்பெண்..!!

பெட்ரோல் பங்குகளில் நடக்கும் மோசடிகளை ஒரு இளம்பெண் தனது சமயோசித புத்தியால் அம்பலப்படுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்தப்…

18 minutes ago

“காப்பாற்ற வேண்டிய போலீஸே இப்படியா?” – பெசன்ட் நகர் கடற்கரையில் கல்லூரி மாணவிக்கு நேர்ந்த கொடூரம்… அதிர்ந்துபோன சென்னை…!

சென்னை பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரையில் தனது ஆண் நண்பருடன் பேசிக்கொண்டிருந்த கல்லூரி மாணவிக்கு, பாதுகாப்பு அளிக்க வேண்டிய காவலராலேயே…

24 minutes ago

“பேச்சுவார்த்தை தோல்வி.. இனி ஆட்டம் வேற மாதிரி”… இஸ்ரேலில் 6500 டன் ஆயுதங்களை குவித்த அமெரிக்கா.. நடுங்கும் ஈரான்…!

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான மோதல் போக்கு தற்போது புதிய உச்சத்தை எட்டியுள்ளது. ஹார்முஸ் ஜலசந்தி மற்றும் ஈரானிய கடற்படையை…

32 minutes ago

பகீர் ரெய்டு..! மதுக்கடையைப் புகுந்து துவம்சம் செய்த கிராமத்து தாய்மார்கள்… குடிகார கணவன்மார்களால் வந்த வினை.. அதிரும் உபி..!!

உத்தரப் பிரதேச மாநிலம் இட்டாவா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில், மதுக்கடையால் தங்கள் குடும்பங்கள் சீரழிவதைக் கண்டு கொதித்தெழுந்த பெண்கள்,…

38 minutes ago