புஷ்பா புருஷன் மாதிரி தான் விக்னேஷ் சிவனும்.. எங்க கிட்ட நிறைய சீக்ரெட் இருக்கு.. வலைப்பேச்சு பிஸ்மி போட்டுடைத்த உண்மை..!

By Nanthini on மார்கழி 13, 2024

Spread the love

தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் ஆக வலம் வந்து கொண்டிருக்கும் நயன்தாராவின் ஆவணப்படம் சமீபத்தில் வெளியாகி இருந்தது. இந்த படத்தில் நயன்தாராவின் முதல் படம் முதல் கடைசி படம் வரை அனைத்து காட்சிகளும் சேர்க்கப்பட்டிருந்தன. அதன்படி விக்னேஷ் சிவனுக்கும் நயன்தாராவுக்கும் காதல் மலர்ந்த நானும் ரவுடிதான் திரைப்படத்தின் சில காட்சிகளை இப்படத்தில் இணைத்திருந்தனர். ஆனால் இப்படத்தின் தயாரிப்பாளர் தனது உரிமை இல்லாமல் எப்படி படத்தின் காட்சிகளை நீங்கள் இணைக்க முடியும் என்று கூறி வழக்கு தொடர்ந்திருந்தார். இப்படியான நிலையில் தனுசுக்கு எதிராக நடிகை நயன்தாரா அறிக்கை வெளியிட்டார். இந்த விவகாரம் சூடு பிடிக்க தொடங்கிய நிலையில் நயன்தாரா செய்தது தான் தவறு என்று தனுஷ் மீது தவறு இல்லை என வலைப்பேச்சு அந்தணன் மற்றும் பிஸ்மி ஆகியோர் பேசியதால் நடிகை நயன்தாராவுக்கு அவர்கள் மீது கோபம் ஏற்பட்டுள்ளதாக கூறுகின்றனர்.

Naanum Rowdy Dhaan movie Issue Breaks Dhanush Nayanthara friendship :  தனுஷுக்கு விபூதி அடித்தாரா நயன்தாரா? நானும் ரெளடி தான் படத்தின் போது  வெடித்த பிரச்சனை என்ன?

   

இதனைத் தொடர்ந்து கெட்டதை பார், கெட்டதை கேள், கெட்டதை மட்டுமே பேசு என்று சொல்லும் மூன்று மோசமான குரங்குகள் சினிமா கிசுகிசுக்களை பற்றி பேசியே வயிற்றை வளர்த்து வருகிறார்கள் என்று நயன்தாரா வலைப்பேச்சு டீமில் உள்ள அந்தணன், மிஸ்மி மற்றும் சக்திவேல் உள்ளிட்ட மூவரையும் நேரடியாக விமர்சித்திருந்தார். இதனை தொடர்ந்து இந்த விமர்சனங்களுக்கு வலைப்பேச்சு பிஸ்மி பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் பிரபல யூட்யூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், நயன்தாரா பற்றி நாங்கள் அவ்வளவு அதிகமாக வீடியோ போட்டது கிடையாது. தனுஷ் விவகாரம் வந்த பிறகு தான் ஒரு சில நெகட்டிவ்வான வீடியோக்களை போட்டோம். இருந்தாலும் அது எல்லாமே உண்மைதான்.

   

வலைப்பேச்சு டீமை குரங்கு என்று விமர்சித்த நயன்.. வைரலாகும் அவரின் புதிய  பேட்டி ..

 

நயன்தாரா எங்களை மூன்று குரங்குகள் என்று தாக்க காரணம் நயன்தாரா பற்றி நிறைய மறைக்கப்பட்ட உண்மைகள் எங்களுக்கு தெரியும் என்பதால்தான். ஒருவேளை அந்த சம்பவங்களை நாங்கள் வெளியில் கூறி விடுவோம் என்ற பயத்தில் தான் அவர் அப்படி பேசியுள்ளார். நயன்தாராவின் கணவர் என்பதுதான் விக்னேஷ் சிவனுக்கு அடையாளம். ஒரு படத்தில் புஷ்பாவின் கணவர் என்று சொல்வது போல நயன்தாராவின் கணவர் என்று சொல்வது தான் அவருக்கு அடையாளமாக உள்ளது. நயன்தாரா சம்பாதித்த நிறைய படங்களை தற்போது பல பிசினஸ்களில் முதலீடு செய்து வருகிறார்கள். இது ஒரு வகையில் நல்லது தான். கடைசி வரைக்கும் சினிமா சோறு போடும் என்று சொல்ல முடியாது.

Bala Replies Back To Valaipechu Bismi In His Style | பாலா

ஆனால் சமீபத்தில் பாண்டிச்சேரியில் ஒரு அரசு ஓட்டலை விக்னேஷ் சிவன் வாங்குவதாக தகவல் வெளியாகி இருந்தது. இது ஒரு தவறான செயல்தான். அரசு சொத்தை வாங்க நினைப்பது மிகப் பெரிய முட்டாள்தனம். இதைத் தெரிந்தும் ஏன் அவர் செய்கிறார் என தெரியவில்லை. பணம் இருக்கவங்க எல்லாம் அறிவாளியாக முடியாது, அறிவாளி கையில எல்லாம் பணம் இருக்காது என்று ஒரு பழமொழி உள்ளது. குறுக்கு வழியில் சென்று அரசு சொத்தை வாங்க நினைப்பது மிகப்பெரிய தவறு என்று விக்னேஷ் சிவனை பிஸ்மி விமர்சித்துள்ளார்.