இன்று தமிழ் சினிமாவில் இருக்கும் மினிமம் கியாரண்டி நடிகர்களின் பட்டியலில் இடம்பிடித்துள்ளவர் ஜெயம் ரவி.தனது அண்ணன் இயக்கிய ஜெயம் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். இவரது தந்தை மோகன் பிரபல எடிட்டர் ஆவார். அண்ணன் மோகன் ராஜா பிரபல இயக்குனர் ஆவார். இவர்கள் கூட்டணியில் உருவான படங்களான உனக்கும் எனக்கும், சந்தோஷ் சுப்ரமணியம், தில்லாலங்கடி ஆகிய திரைப்படங்கள் வெற்றிப் படங்களாக அமைந்தன.
கடைசியாக இவர்கள் கூட்டணியில் உருவான தனி ஒருவன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து விரைவில் தனி ஒருவன் 2 திரைப்படமும் உருவாக உள்ளது. கடந்த 2009 ஆம் ஆண்டு ஜெயம் ரவி ஆர்த்தி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினர் இரண்டு மகன்கள் இருக்கின்றனர். மகிழ்ச்சியாக நட்சத்திர தம்பதிகளாக சென்றுகொண்டிருந்த இவர்கள் வாழ்க்கையில் இப்போது விவாகரத்து எனும் விரிசல் விழ ஆரம்பித்துள்ளது.
ஏற்கனவே திரையுலகில் இருக்கும் பிரபலங்கள் விவாகரத்து செய்து கொள்வதாக வரும் தகவல்களால் ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். இந்நிலையில் ஜெயம் ரவியின் விவாகரத்து முடிவுக்கு என்ன காரணம் என்பது குறித்து சினிமா பத்திரிக்கையாளர் அந்தணன் ஒரு நேர்காணலில் கூறியுள்ளார்.
அதில் “ஜெயம் ரவி கடந்த சில ஆண்டுகளாகவே அவரின் மாமியார் கண்ட்ரோலில் வைக்கப்பட்டார். இதன் காரணமாக அவரால் வெளிக் கம்பெனிகளில் படம்பண்ண முடியாத சூழல் உருவானது. தனது சொந்த அண்ணனுக்கே அவரால் கால்ஷீட் கொடுக்க முடியவில்லை. அந்தளவுக்கு அவரை சுற்றி ஒரு வளையம் உருவாக்கப்பட்டது.
இது ஒரு பக்கம் இருக்க, ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தி, அவர் மேல் தேவையே இல்லாமல் சந்தேகப்பட்டு கொண்டு அவரை டார்ச்சர் செய்துள்ளார். அவர் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருக்கும்போது அவருக்கு கால் செய்துகொண்டே இருப்பார். அவர் எடுக்கவில்லை என்றால் அந்த யூனிட்டில் இருக்கும் இயக்குனர் அல்லது கேமராமேனுக்கு தொடர்ந்து போன் செய்வார். இப்படி அவர் யார் கூட பேசுகிறார்? எங்கே இருக்கிறார் என்று கண்கானித்துக் கொண்டே இருந்துள்ளார். ஒரு கட்டத்தில் இதையெல்லாம் தாங்க முடியாமல்தான் ஜெயம் ரவி விவாகரத்து முடிவை எடுத்தார்” எனக் கூறியுள்ளார்.