திடீர் திருப்பம்… அதிமுக கூட்டணியில் 15 சீட், ஒரு ராஜ்ய சபா சீட்… பரபரப்பை கிளப்பிவிட்ட வைகோ…!

Spread the love

தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருப்பதால் அனைத்து கட்சிகளும் மாறி மாறி மாற்றுக் கட்சியினரை கடுமையாக விமர்சித்து வருகின்றன. இதனிடையே இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, 2011 சட்டமன்ற தேர்தல் சமயத்தில் ஓபிஎஸ், செங்கோட்டையன், ஜெயக்குமார் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த வந்தனர். 2011 சட்டமன்ற தேர்தலில் மதிமுகவிற்கு 12 தொகுதிகள் தான் என ஜெயலலிதா கூறியதாக ஓபிஎஸ் தெரிவித்தார். 2006 தேர்தலில் அதிமுக கூட்டணியில் 35 இடங்களில் போட்டியிட்டு இருந்தது மதிமுக. 2006 ஆம் ஆண்டில் 35 இடங்களில் போட்டியிட்ட மதிமுகவுக்கு 2011 ஆம் ஆண்டில் 12 தொகுதிகள் என்பதை ஏற்க முடியாது என்று கூறினேன்.

இதனைத் தொடர்ந்து அதிமுக கூட்டணியில் 12 தொகுதிகள் கேட்டபோது வைகோவுக்கு கூட்டணியில் இணைய விருப்பமில்லை என ஓபிஎஸ் ஜெயலலிதாவிடம் பொய் சொல்லிவிட்டார். ஜெயலலிதாவிடம் அவர் கூறிய தகவல்கள் அனைத்தும் தவறானது. 2011 இல் செய்த தவறுக்காக இப்போது ஓபிஎஸ் அனுபவிக்கிறார். 15 தொகுதி தர ஜெயலலிதா முன்வந்த போது 12 சீட்டை தர முடியும் என ஓபிஎஸ் கூறினார். ஜெயலலிதா 15 தொகுதி மற்றும் ஒரு ராஜ்ய சபாத் சீட் தர தயாராக இருந்தது பிறகு தான் எனக்கு தெரியும். இது அனைத்திலும் சதி வேலை செய்தது ஓபிஎஸ் தான் என வைகோ குற்றம் சாட்டியுள்ளார்.

Nanthini

Recent Posts

உட்காந்து பேசுவோம் பாஸ்..! போங்க போங்கன்னு விரட்டாம வாங்க வாங்கன்னு கூப்டுங்க… இபிஎஸ்-ஸுக்கு எஸ்.பி.வேலுமணி போட்ட திடீர் சமாதான தூது..!!

அதிமுகவில் நிலவி வரும் உட்கட்சிப் பூசல்களுக்கு இடையே, முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு (இபிஎஸ்)…

12 minutes ago

அடுத்த தரமான சம்பவம்..! லஞ்சத்தை ஒழிக்க முதல்வர் விஜய் போட்ட 3 மாத கெடு… அமைச்சர்களும், MLA-க்களும் எடுத்த முடிவு..!!

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும் அடுத்த 3 மாதங்களுக்குள் லஞ்சத்தை ஒழிக்க முதலமைச்சர் ஜோசப் விஜய் அதிரடி உத்தரவு…

14 minutes ago

“மெட்ராஸின் எப்ஸ்டீன்” என்னிடம் அத்துமீறிய இசையமைப்பாளர் பெயரை வெளியிடுவேன்… பின்னணி பாடகி ஸ்வாகதா கிருஷ்ணனின் அதிர்ச்சி வாக்குமூலம்..!!

தமிழ் திரையுலகில் முன்னணி பின்னணி பாடகியாக விளங்கும் ஸ்வாகதா கிருஷ்ணன், பிரபல இசையமைப்பாளர் ஒருவர் மீது அண்மையில் அடுக்கடுக்கான பாலியல்…

17 minutes ago

BREAKING: மகளிர் உரிமைத்தொகை ரூ.1000 வரவு.. காலையிலேயே இன்ப அதிர்ச்சி..!!

தமிழ்நாட்டில் மே 2026 மாதத்திற்கான மகளிர் உரிமைத் தொகை ₹1,000 பயனாளிகளின் வங்கிக் கணக்கில் வெற்றிகரமாக வரவு வைக்கப்பட்டுள்ளது. இத்திட்டம்…

21 minutes ago

தமிழகம் முழுவதும் அனைத்து மகளிருக்கும்.. CM விஜய் காலையிலேயே அதிரடி…!

சேலத்தில் தொடங்கி வைக்கப்பட்டுள்ள 'சிங்கப்பெண்' அதிரடிப் படை, தமிழக அரசியலில் ஒரு முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது. தமிழக முதல்வராக விஜய்…

1 மணத்தியாலம் ago

“பிஎஃப் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்!… இனி 3 நாட்களில் பணம் உங்கள் கையில்… மத்திய அரசின் மெகா அறிவிப்பு”…!!!

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) தனது 7 கோடி உறுப்பினர்களுக்கான பணப்பலன்களைப் பெறும் முறையை அதிரடியாக எளிமைப்படுத்தி…

1 மணத்தியாலம் ago